கோவையில் மகளிர் குழு பெயரில் மோசடி; போலீசார் வழக்கு
கோவை அரசு மருத்துவமனை அருகே கடந்த 16 வருடங்களாக தனியார் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள் தொழில் தொடங்குவதற்காக கடன் தொகை வழங்கப்படுகிறது. அந்த தொகையை மகளிர் சுய உதவி குழுவினர் மாதந்தோறும் அறக்கட்டளைக்கு திருப்பி செலுத்தி வருகின்றனர். அவர்களிடம் பணம் வசூல் செய்ய அறக்கட்டளை நிர்வாகம் ஊழியர்களை நியமனம் செய்துள்ளது. அதேபோல 65 குழுவினரிடம் பணம் வசூல் செய்ய பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முனிராஜா என்பவரை…
