கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் ஏமாற்றம்
கோவை மாநகராட்சியில் ஆண்டு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை மேயர் ரங்கநாயகி கவுன்சில் கூட்டத்தில் அறிவித்தார். அவர் கூறியதாவது ; மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களில் தேவையான மராமத்து பணிகளை மேற்கொள்ள இந்த நிதி ஆண்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் சுகாதார நிலையம் மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் உடல்…
