ஆத்தா ”கண்” பார்த்தா..
உக்கடம் என் ஹெச் ரோடு பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் அம்மன் சாமிக்கு இன்று பூஜை நடந்தது. அப்போது அம்மன் கண் திறக்கப்பட்டதாக அங்கே இருந்த பக்தர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோயிலில் கூட்டம் குவிந்தது. அம்மன் சிலையில் கண் திறந்தது எப்படி என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் விசாரித்தனர். ஆத்தா கண் திறந்தால் அனைத்து கஷ்டங்களும் தீரும் என பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.
