ஏன் குப்பை எடுக்கல.. இந்த 5 லட்ச ரூவா பைன்..

கோவை நகரில் பல இடங்களில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. தெருநாய்கள் , பெருச்சாளிகள் குப்பையை கிளறிக் கொண்டிருக்க மக்கள் தொடர்ந்து புகார் அளித்து புலம்பி கொண்டிருக்கிறார்கள். இன்று கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஜிவி ரெசிடென்சி , சவுரிபாளையம் பகுதியில் சுற்றிப் பார்த்தபோது ரோட்டோரம் குப்பை குவிந்து கிடந்தது . இது தொடர்பாக விசாரித்தவர் குப்பையை அகற்ற வேண்டிய தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு அதிரடியாக ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். இங்கே…

Read More

26 டன் சோபா மெத்தை குப்பை..

கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள நூறு வார்டுகளில் ரோட்டோரம் மற்றும் பொது இடங்களில் சோபா மெத்தை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் குவிந்து கிடப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தினர் இன்று லாரி மூலமாக பயன்பாட்டின்றி கிடந்த பொருட்களை சேகரித்தனர். 5 மண்டலங்களிலும் 26. 22 டன் அளவிற்கு மெத்தை தலையணை சோபா சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

Read More