கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் மாயமான 2 சிறுமிகள் மீட்பு
கோவை, உக்கடம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு 2 சிறுமிகள் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, கோவை மாநகரில் ரோந்து சென்று பெண்களை கண்காணிக்கும் பிங்க் பெட்ரோல் வாகனத்தில் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் 2 சிறுமிகளையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கேரளா மாநிலம் வாளையார் அருகே உள்ள கஞ்சிக்கோடு பனங்காடு பகுதியில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், விசாரணையில் அவர்கள் 17, 14 வயதுடைய அக்கா, தங்கை என்பதும்,…
