காலை மிதித்த தொழிலாளியை கழுத்தில் குத்தி கொன்ற கும்பல்..
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ்குமார் (23). இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலருடன் மலுமிச்சம்பட்டி கணபதி நகரில் தங்கி சிட்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலிவேலை செய்து வந்தார். நேற்று அனைவரும் அறையில் அமர்ந்து மது அருந்தினர் . அப்போது போதையில் இருந்த ஒருவர் தவறுதலாக ராகேஷ்குமாரின் காலை மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது . அதில் ஆத்திரம் அடைந்த ராகேஷ்குமாரின் நண்பர்கள் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ராகேஷ்குமாரின் கழுத்தில் குத்தினர்…
