கோவை மாவட்ட எல்லையில் கனிமம் கடத்தல் கண்டறிய கேமரா

கோவை வழியாக கேரளாவிற்கு ஜல்லி கற்கள், செம்மண் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை, வருவாய் துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக கோவை-கேரள மாநில எல்லைகளான வாளையாறு, வேலாந்தாவளம் உள்பட 16 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதுதவிர ஊரக பகுதிகளான பேரூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, சூலூர் உள்பட குவாரிகள், செம்மண் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள்…

Read More