தமிழக வனத்தில் 13 ஆண்டில் 41195 தீ விபத்து..! WWF India அதிர்ச்சி தகவல்
கோவை சாய்பாபா காலனி பகுதியில் WWF India என்ற இயற்கைக்காக உலகளாவிய நிதியம் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் உதவி என்ற காட்டுத்தீ மேலாண்மை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. கோவை வனக்கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, திருப்பூர் வனக்கோட்டத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறைகள், வனத்துறையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள்…
