கோமாரியில் 30 ஆடுகள் செத்துப் போச்சு.. கோவை கலெக்டர் ஆபீசில் தொழிலாளி கண்ணீர் புகார்..!
கோமாரியில் 30 ஆடுகள் செத்து நான்கு ஆண்டுகளாக உதவி வழங்காமல் ஏமாற்றுவதாக கோவை கலெக்டர் ஆபீஸில் தொழிலாளி ஒருவர் இன்று கண்ணீருடன் புகார் அளித்தார். கோவைதொண்டாமுத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலன். 65 வயதான இவர் ஆடு மேய்க்கும் வேலை செய்து வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். கொரோனா நோய் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் இவரது ஆடுகளுக்கு கோமாரி என்ற வாய் சப்பை நோய் தாக்குதல்…
