ஊருக்குள் புகுந்த யானைகள்
கோவை குப்பனூர் வனப்பகுதியில் சுற்றிய யானைகள் தங்களது குட்டிகளுடன் நேற்று இரவு ஊருக்குள் புகுந்தனர். குடியிருப்பு பகுதியில் உலா வந்த யானைகளை வனத்துறையினர் ஜீப் மூலமாக விரட்டினார். சர்ச் லைட் வெளிச்சத்தில் பதறிப்போன யானைகள் தங்களது குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தன.
