ரேஸ் கோர்ஸ் நியூ இயர் பார்ட்டிக்கு கட்டுப்பாடு

கோவை ரேஸ் கோர்ஸ் வாக்கிங் ஏரியா மற்றும் மீடியா டவர் பகுதியில் தினமும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இதேபோல் ஆர் எஸ் புரம் ஸ்மார்ட் சிட்டி கிளாக் டவர் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் தினமும் அதிகமாக உள்ளது புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரவு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கூட்டமாக குவிந்து பார்ட்டி கொண்டாட உள்ளனர். குறிப்பாக டான்ஸ் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடக்க உள்ளது. இதற்கு கோவை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு…

Read More

துப்பாக்கியால் சுடப்பட்ட 3 கொள்ளையர்களுக்கு குண்டாஸ்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளது. இந்த வீடுகளில் அரசு அலுவலர்கள் வசிக்கின்றனர். இங்கு ஏ பிளாக்கில் உள்ள 3 வீடுகளிலும், சி3 பிளாக்கில் 10 வீடுகளிலும் கடந்த மாதம் நகை பணம் திருடப்பட்டது. இந்த வீடுகளில் திருட்டு நடந்த விவரம் அந்தந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் வீடுகளுக்கு சென்று பார்வையிட்டனர். இது தொடர்பான தகவல் அறிந்து கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்….

Read More

அமெரிக்க மாணவியை மனைவியாக்கிய கோவை வாலிபர்…

கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ராமன் நம்பீசன், உமா ஆகியோர் கோவை குனியமுத்தூரில் வசிக்கின்றனர். இவர்கள் மகன் வாசு தேவன் (30). இவர் அமெரிக்காவில் விண்வெளி மையத்தில் பொறியாளராக வேலை செய்து வருகிறார் இவருக்கும் அமெரிக்காவின் பிலடெல்பியாவை சேர்ந்த சைமன் கசாஸ், கிறிஸ்டின் கசாஸ் ஆகியோரின் மகளான கட்டட கலை படித்து வரும் மாணவியான கரோலின் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலானது. இரு தரப்பினரும் தங்களது காதல் விசயத்தை பெற்றோரிடம் கூறினர். இரு தரப்பு…

Read More

மருதமலையில் குட்டி கருஞ்சிறுத்தை மீட்பு..

கோவை மருதமலை தொழு நோயாளிகள் குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டது. தாயைப் பிரிந்து சுற்றிக் கொண்டிருந்த இந்த குட்டி சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு கூண்டில் அடைத்துள்ளனர். தாய் சிறுத்தை எங்கே இருக்கிறது என வனத்துறை என தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கருஞ்சிறுத்தை நடமாட்டம் மருதமலை வனப்பகுதியில் காணப்பட்டது. கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த சிறுத்தை சுற்றிக் கொண்டிருந்தது. இதனுடன் இருந்த இந்த குட்டி சிறுத்தை வழி மாறி வந்திருக்கலாம் என தெரிகிறது….

Read More

2191 கிலோ கஞ்சா தீயில் சாம்பல்..

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணி நடத்தி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர் கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மூலமாக பறிமுதல் செய்யப்பட்ட 2191 கிலோ எடையிலான கஞ்சா இன்று மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் செட்டிபாளையம் பகுதியில் உள்ள பாய்லர் தொழிற்சாலையில் தீயில் போட்டு அழிக்கப்பட்டது. கோவை திருப்பூர் நீலகிரி ஈரோடு மாவட்டத்தில் 1317 வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா பறிமுதல்…

Read More

மன்னாதி மன்னன் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி…

தமிழகத்தின் மன்னாதி மன்னன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கோவை மாவட்டத்தில் பரவலாக அனுசரிக்கப்பட்டது. நகர் புறநகர் பகுதியில் எம்ஜிஆர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம்ஜிஆருக்கு இருக்கும் மவுசு மிகுதியாகவே இருக்கிறது. அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்தி போஸ்டர் வைத்திருந்தனர். காலத்தால் அழியாத எம்.ஜி.ஆர் பாடல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Read More

கோவைக்கு கலைஞர் ஏர்போர்ட்

கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மத்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் , “முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி , 1969 முதல் 2011 வரை ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக நீண்ட காலம் பணியாற்றினார். 1957 ல் முதல் வெற்றிக்குப் பிறகு 13 முறை வெற்றி பெற்றுள்ள கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒருபோதும் தோல்வியடையாத சாதனையைப் படைத்துள்ளார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் தமிழ் திரைப்படத் துறையில் ஒரு திரைக்கதை எழுத்தாளராகப்…

Read More

SIR படிவம் தர நாளை கடைசி..

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடக்கிறது. மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 15.57 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது, இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர் திரும்ப இடம் பெற வேண்டுமானால், அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இவர்கள் திரும்ப வாக்காளர்களாக சேர்க்க முடியும். எஸ்ஐஆர்…

Read More

போலீசில் 13 வாகனங்கள் ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 8 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 13 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 30.12.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும். . மேற்கண்ட 13 வாகனங்களும் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் 29.12.2025 அன்று மாலை…

Read More

கோவையில் 50000 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 4,25,705 பயனாளிகளுக்கு ரூ.1000/- வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.5,10,84,60,000/- (ரூபாய் ஐநூற்று பத்து கோடியே எண்பத்தி நான்கு இலட்சத்து அறுபதாயிரம்) தொகையானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான மகளிருக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மாவட்டத்தில் கடந்த ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம்பொதுமக்களிடமிருந்து…

Read More