கோவை மதுக்கரையில் யானைகள் நடமாட்டம் கண்டறிய ட்ரோன் கண்காணிப்பு பிரிவு
கோவை மதுக்கரை வனப்பகுதியில்வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு இன்று திறக்கப்பட்டது. தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இந்த பிரிவை துவக்கி வைத்தார். இதில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுக்கரை வனப்பகுதி ரயில் பாதைகளில் யானைகள் இறப்பதைத் தடுக்க, வனத்துறை ஏ ஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்தியது.
தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக கழகத்துடன் இணைந்து 8.67
கோடி ரூபாய்
செலவில் வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தில்
இந்த ட்ரோன் கண்காணிப்பு பிரிவு திறக்கப்பட்டுள்ளது.
யானை நடமாட்டம் ரயில் பாதையில் யானைகள் சென்றால் அது தொடர்பான தகவல்களை விரைவாக அனுப்ப வசதி, யானைகள் பாதுகாப்பாக ரயில் பாதையின் கீழ் உள்ள சப்வே வழியாக செல்கிறதா என்பதை கண்டறிய இந்த ட்ரோன் உதவிகரமாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்
