எப்போ தரப்போறாங்க… கோவையில் காத்திருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மொபட்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 150 மொபட் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டது. ஒரு மொபெட் 1.08 லட்ச ரூபாய் மதிப்பிலானது.
இதற்கு மாற்றுத்திறனாளிகள் ஓடடும் வகையில் பக்கவாட்டில் இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வாகனங்கள் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த வாகனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ” முதல்வர் அல்லது அமைச்சர் விழாக்களில் இந்த வாகனங்களை ஒப்படைக்க திட்டமிடப்பட்டது .
ஆனால் விழா நடப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று விரைவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும், ” என்றனர்.
