தேர்தலுக்கு 48 மணி நேரம் முன் பணம், பரிசு தடுக்க உத்தரவு…!
கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கு முன் 72 மணி நேரம் செய்ய வேண்டிய முக்கிய பணியில் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிகழ்வுகளில் கடினமான சூழ்நிலை நிலவக்கூடிய பகுதிகளில் பணியாளர்களை பணி அமர்த்துவதில் மூன்றாவது முறையாக சம வாய்ப்பு முறை ஏற்படுத்த வேண்டும்.
வாக்கு சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நெருக்கடி நிலை உடைய வாக்கு சாவடிகளில் இரண்டு நிலை போலீஸ் படை, அதாவது உள்ளூர் போலீஸ், துணை ராணுவம் இருக்க வேண்டும். தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ கேமரா, வெப் காஸ்டிங் மூலமாக கண்காணிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பண பலத்தை தவறாக பயன்படுத்தி ஓட்டு கேட்பதை தடுக்க சிறப்பு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
மாவட்ட மாநில எல்லை பகுதிகளில் இருந்து யாராவது வந்து ஓட்டு பதிவு தடுக்கும் வகையில் செயல்பட்டால் அதை தடுக்க வேண்டும். பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ஒட்டு பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா வாகனங்கள் சரியான முறையில் இயந்திரங்கள் சரியான முறையில் சென்று வருகிறதா அதற்கு ஜிபிஎஸ் இருக்கிறதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
சுய உதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணம் வழங்கப்படுவதை தடுக்க வேண்டும். திருமண மண்டபம், சமுதாயக்கூடங்களில் பரிசு பொருள்கள் இலவச உணவு வழங்க கூடாது. பொது இடங்களில் சத்திரங்களில் கூட்டங்கள் கூடுவதை கண்காணிக்க வேண்டும்
. அரசு திட்டத்தின் கீழ் ஊதியம் மற்றும் மற்ற சலுகைகள் வழங்கப்படக் கூடாது. சி விஜில் செயலி, என்ஜிஎஸ் வலைதளம், வாக்காளர் உதவி மைய செயலி, உங்கள் வேட்பாளர் அறிந்து கொள்வதற்கான தளங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தேர்தலுக்கு முன் 48 மணி நேரம் மிக முக்கியமானது. ஓட்டுப்பதிவுக்கான சாதனங்கள், ஆவணங்கள் மற்றும் வாகனங்களை தயார் செய்ய வேண்டும். ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். பிரச்சாரம் முடிந்த பின்னர் தொகுதியில் அரசியல் கட்சி நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள்,
ரகசியமாக அவர்கள் ஓட்டு கேட்கிறார்களா? பணம் பொருட்களை வழங்குகிறார்களா என தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பணம் மதுபானம் போதை பொருட்கள் பரிசு பொருட்கள் போன்றவை தேர்தலுக்கு முன் 48 மணி நேரங்களில் வழங்கப்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
அந்த நேரங்களில் தேர்தல் பிரிவின் செயல்பாடு தீவிரமாக துல்லியமாக இருக்க வேண்டும்.
பணம் பொருட்களை வழங்கும் கும்பல்களை மக்கள் தரும் தகவல் அடிப்படையில் உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த இடங்களிலும் பணம் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்வதை விட்டு விடக்கூடாது. கடைசி 48 மணி நேரம் என்பது மிக மிக கவனமாக செயல்பட வேண்டிய காலம், எனவே தேர்தல் பிரிவில் அனைத்து துறைகளும் போலீஸ் மற்றும் துணை ராணுவ படையும் இந்த காலகட்டத்தில் தங்கள் கடமையை மிக சரியாக செய்து தர வேண்டும்.
ஜனநாயக ரீதியான முறையில் தேர்தல் நடக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என தேர்தல் கமிஷன் செக் லிஸ்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.
