கட்டு கட்டா சிக்குச்சு 40 லட்ச ரூபாய்…

கோவை மாவட்ட எல்லையான வேலந்தாவளம் பகுதியில் கேரள மாநில போலீசார் இன்று காலை சோதனை செய்தபோது காரில் வந்த ஒரு நபரிடம் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது தனது பெயர் சுதீர் எனவும் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார்.

அங்கே நகை கடை நடத்தி வருவதாகவும் பழைய தங்க நகைகளை கோவை நகரில் விற்பனை செய்து விட்டு அந்த பணத்தை கொண்டு வருவதாகவும் கூறி இருந்தார் .இவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் பணத்திற்கு உரிய ஆவணங்கள் கேட்டு விசாரித்து வருகின்றனர். கோவை வழியாக கேரள மாநிலத்திற்கு ஹவாலா பணம் அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார் இருந்துள்ளது. போலீசார் சோதனை சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். பெங்களூரு மைசூரு உட்பட பல்வேறு பகுதியில் இருந்து ரூபாய் நோட்டுகள் கடத்தி வரப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது . எனவே போலீசார் சோதனையை தீவிர படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *