K. V

கோவை சர்க்கார் சாமக்குளத்தில் நாளை புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு

கோவை மாவட்டத்தில் 18 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது தற்போது கூடுதலாக சர்க்கார் சாமக் குளத்தில் 19வது சார் பதிவாளர் அலுவலகம் நாளை திறக்கப்பட உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் முறையில் அலுவலக கட்டடத்தை நாளை திறக்க உள்ளார். பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அன்னூர் சார் பதிவாளர் எல்லைக்குட்பட்ட சில பகுதிகள் பிரிக்கப்பட்டு சர்க்கார் சாமகுளம் அலுவலக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அக்ரஹார சாமக்குளம் கொண்டையம் பாளையம் வெள்ளமடை கீரணத்தம் சர்க்கார் சாமக்குளம் போன்ற…

Read More

கோவையில் டெமோ மெஷினில் பல ஆயிரம் ஓட்டுப் பதிவு…!

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம். சூலூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு ஓட்டு போட பயிற்சி வழங்கவேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தற்போது ஓட்டு மெசின்கள் சரி பார்ப்பு பணி முடிந்தது. இதில் பயன்படுத்தும் நிலையில் 15,117 மெசின்கள் இருப்பதும், பழுதான…

Read More

கோவை மாவட்டத்தில் வரும் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்

கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 11ஆம் தேதி (புதன்கிழமை) துவங்குகிறது. அன்றைய தினம் தமிழ் மற்றும் மொழிப்பாடத்திற்கான தேர்வும், 16-ம்தேதி ஆங்கிலம், 25-ம்தேதி கணிதம், 30-ம்தேதி அறிவியல் பாடத்திற்கான தேர்வு ஏப்ரல் 2-ம்தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. ஏப்ரல் 6ம்தேதி விருப்ப பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இத்தேர்வை கோவை மாவட்டத்தில் 158 மையங்களில் 518 அரசு பள்ளிகள்,…

Read More

கோவையில் கஞ்சா, சிந்தடடிக் டிரக்… வீடியோ கான்பரன்சில் துணை தேர்தல் கமிஷனர் விசாரணை

சமீபத்தில் கோவை ரயில் நிலையத்தில் வரும் முதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.. (பைல் படம்) கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணைய துணை கமிஷனர் பானு பிரகாஷ் யத்ரூ இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஆலோசனை கூட்டத்தில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த முறை தேர்தல் ஆணைய துணை கமிஷனர் தான் ஆய்வுக்கு…

Read More

கோவை மாவட்டத்தில் மேலும் 20 ஆயிரம் பேர் வாக்காளர்களாக விண்ணப்பம்..!

கோவை மாவட்டத்தில் கடந்த 23ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 11,00,889 ஆண் வாக்காளர்கள், 13,95,396 பெண் வாக்காளர்சகள், 528 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 26,96,813 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 25,74,608 பேர் வாக்காளர்களாக இருந்தனர். இந்த நிலையில் 1,22,205 வாக்காளர்கள் 2 மாதத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக எஸ்ஐ.ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடந்தது….

Read More

கோவையில் வீடு வீடாக அதிமுக கொடுத்த பரிசு..!

கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் முப்பெரும் தலைவர்கள் பிறந்தநாள் விழா என்ற பெயரில் வீடு வீடாக பரிசு பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது. கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு ஹாட் பாக்ஸ் மற்றும் சில்வர் தட்டு வழங்கப்பட்டது. சில்வர் தட்டில் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி எடப்பாடி யார் பெயர்களை எழுதி வைத்திருந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரிசு பொருட்கள் வழங்கும் பணி நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. கோவை மாவட்ட…

Read More

கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா..!

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இன்று காலை எட்டு மணி அளவில் தன்பாத் ஆலப்புழா ரயில் கோவை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார். இதையடுத்து, போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான 4 கிலோ…

Read More

கோவையில் மாரியம்மன் சிலை உடைப்பால் பரபரப்பு..

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் மாரியம்மன் மற்றும் முனியப்பன் கோயில் உள்ளது. இன்று அந்த கோயிலில் மாரியம்மன் முனியப்பன் சிலை சேதம் செய்யப்பட்டிருந்தது. சுவாமி முகத்தில் மர்ம நபர்கள் சேதம் ஏற்படுத்தி இருந்தனர். இதே போல் கோயில் வளாகத்தில் இருந்த சூலம் சாய்க்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் பாபா கிருஷ்ணன் , செய்தி தொடர்பாளர் தனபால், குனியமுத்தூர் பகுதி பொறுப்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் அங்கே சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில்…

Read More

கோவையில் 3 நகராட்சிகளில் ஆதார் மையம் துவக்கம்

கோவை மாவட்டத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிரந்த ஆதார் மையம் இருக்கிறது. இது தவிர தாலூகா அலுவலகங்கள், ஆர்எஸ்புரம், பொள்ளாச்சி மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் வங்கி கிளைகளில், தலைமை தபால் அலுவலகம் போன்றவற்றில் ஆதார் மையங்கள் உருவாக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகங்களில் ஆதார் மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக மதுக்கரை, கூடலூர், காரமடை நகராட்சி அலுவலகத்தில் நிரந்த ஆதார் மையம் துவக்கப்பட்டது. இந்த நகராட்சிகளில் உள்ள ஆதார் மையங்களை அந்த பகுதி மக்கள் பயன்படுத்தலாம் என…

Read More

கோவையில் பிளாட்பாரத்தை அபகரித்த கடைகள்.. வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்..!

பெரிய கடை வீதி போத்தீஸ் அருகே அபகரிக்கப்பட்ட பிளாட்பார பாதை.. கோவை மாநகர எல்லையில் 5 தேசிய நெடுஞ்சாலைகள், 57.2 கிலோ மீட்டர் நீளமுடைய 6 மாநில நெடுஞ்சாலை, 77 கிலோ மீட்டர் நீளமுடைய முக்கிய மாவட்ட சாலை மற்றும் 40.7 கிலோ மீட்டர் நீளமுடைய இதர மாவட்ட சாலை, மாநகராட்சி கட்டுபாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதிகளில் ரோடுகள் அமைந்துள்ளது. போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலைப்பாதுகாப்பு குறித்து கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளையும் புதிய…

Read More