K. V

கோவையில் கிரஷர், குவாரிகள் நல சங்கம் சார்பில் 28 ஏக்கரில் மரக்கன்று நடவு…!

கிரசர் மற்றும் குவாரிகள் நல சங்கம் சார்பில் கோவையில் 28 ஏக்கரில் மரக்கன்று நடவு பணி துவக்கம் கோவை மாவட்ட கனிம வளம் மற்றும் புவியியல் துறை, கோயம்புத்தூர் மாவட்ட கிரசர் மற்றும் குவாரிகள் நல சங்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா இன்று நடந்தது. செட்டிபாளையம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் 28 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்று நடும் பணி தொடங்கியது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கோவை…

Read More

Dvac ride: கோவையில் 2 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…

கோவை மாவட்டத்தில் 18 சார் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கிறது. இந்த அலுவலகங்களில் பணியாற்றும் சில சார்பதிவாளர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது ஓரிரு நாளில் அதிகாரிகள் புதிய இடங்களில் பதவி ஏற்க உள்ள நிலையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீ சார் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவை காந்திபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. பத்திரம் பதிவு…

Read More

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கஞ்சா: ரெய்டு நடத்துமா என்ஐபி…!?

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வாளையார் சின்னம்பதி பாரப்பட்டி நரசிபுரம் மாங்கரை ஆனைகட்டி தோலம்பாளையம் சிறுமுகை மேட்டுப்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள வனங்களில் கஞ்சா சாகுபடி நடக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது. மலைப்பகுதியில் கஞ்சா சாகுபடிக்கு ஏற்ற நிலங்கள் இருப்பதாக தெரிகிறது. இங்கே ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு வளர்ப்பதாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 30 முதல் 50 டன் எடையில் விதை நீக்கப்பட்ட உலர்ந்த தரம் பிரித்த கஞ்சா சேகரிக்கப்பட்டு வருவதாகவும்,…

Read More

கொடூரமாக கொலை செய்தது எப்படி… Coimbatore minor girl வழக்கில் போலீசார் கஷ்டடி விசாரணை…!

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கட்டட தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் கார்த்திக் நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைப்புச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய…

Read More

ladies hostel: கோவையில் உரிமம், பாதுகாப்பற்ற மகளிர் தங்கும் விடுதிகளை மூட உத்தரவு…

கோவை மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள், அரசு, தன்னார்வ மத தொண்டு நிறுவனங்கள் தொழிற்சாலை நிறுவனங்கள், தனியார் மற்றும் அமைப்புகள் நடத்தும் வீட்டைவிட்டு வெளியே தங்கும் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் அனைத்தும் (TamilNadu Hostels and Homes for Women and children Regulation Act 2014) படி பதிவு செய்ய வேண்டும். மேலும் போதிய இடவசதியுடன் சுற்றுப்புற சுகாதாரத்துடன், உள்ளுறைவோர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதத்தில் செயல்பட வேண்டும். உரிய…

Read More

ரியல் எஸ்டேட் பிரமுகரை மிரட்டி நகை பறித்த ‘மாயா குரூப்’ கைது

கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (56) என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்‌ . இவரிடம் ரத்தினபுரியை சேர்ந்த பேபி என்கிற மாயா (23 ) என்பவர் நிலம் வாங்குவதற்காக தொடர்பு கொண்டு பேசினார் . அப்போது சிவகுமார் பன்னிமடையில் இடம் இருப்பதாக கூறி அவரை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார் . அங்கே மனை இடத்தை காட்டியுள்ளார் . அப்போது மாயா தனக்கு இடம் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து…

Read More

drone survey: கோவையில் ஆழமான, அபாய கல் குவாரிகள் விரைவில் மூடல்…

கோவை மாவட்டத்தில் அதிக ஆழம், அபாயமான கல் குவாரிகளை மூட திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 151 கல் குவாரிகள் இருக்கிறது. இதில் கடந்த காலங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கனிம வளங்களின் அளவு, கல் குவாரிகளின் பரப்பு குறித்த விவரங்கள் சேகரிக்க டிரோன் சர்வே நடத்த உத்தரவிடப்பட்டது. அரசுக்கு முறையாக ராயல்டி மற்றும் உரிய பசுமை வரி செலுத்தப்பட்டதா என கண்டறிந்து அதனை பெற வேண்டும். முறைகேடு செய்த கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல் குவாரிகள்…

Read More

Kovai monsoon: தென் பருவ மழை பாதிப்பு தடுக்க ஆலோசனை…

meeting துவங்கும் முன் அதிகாரிகள் போன் chatting… கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் பழனிகுமார், ஆர்டீஓ மாருதிபிரியா, வினோத்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே…

Read More

கோவையில் பாலியல் கொலையாளி கார்த்திக்கிடம் விரைவில் கஸ்டடி விசாரணை

கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது பள்ளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கட்டட தொழிலாளி கார்த்திக் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் கார்த்திக் நண்பர் மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கார்த்திக் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைப்புச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்திருப்பதாக தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய…

Read More

கள்ளகாதல் விவகாரத்தால் கோவையில் டிரைவர் குத்தி கொலையா போலீசார் விசாரணை…!

கோவை ஆர் எஸ் புரம் அருகே உள்ள பட்டுநூல் கார சந்து பகுதியை சேர்ந்தவர் பஷீர் . இவர் மகன் அபுதாகிர் பாஷா (27). இவர் ஆக்டிங் டிரைவராக பணி செய்து வந்தார். தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் நடத்தி வந்ததார். கடந்த 29ம் தேதி அபுதாகிர் பாஷா தனது வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் இரவு 8 மணியளவில் அவர் தனது வீட்டின் அருகிலேயே நின்று கொண்டிருந்ததை அவருடைய தாய் பாத்திமா…

Read More