K. V

டாஸ்மாக் கடைகள் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள் மூடல்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபான கடைகள் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி வரை மூடப்படும். 3 நாட்கள் அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும். மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஓட்டு எண்ணிக்கை நாளான வரும் மே மாதம் 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள்…

Read More

Modi pitches for double engine government at NDA rally in Coimbatore…

COIMBATORE Prime Minister Narendra Modi on Friday called upon voters in Tamil Nadu to support the National Democratic Alliance (NDA), asserting that a “double engine” government would ensure faster implementation of welfare schemes and development projects. Addressing a public meeting at CODISSIA grounds in Peelamedu, Mr. Modi said the people of Tamil Nadu should deliver…

Read More

டபுள் இன்ஜின் அரசு தேவை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு…!

கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை , அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி , பாஜக வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் கோவை திருப்பூர் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் 23…

Read More

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ பிடித்தது…!

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு 630 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 25 லட்சம் மெட்ரிக் டன் குப்பை குவிக்கப்பட்டுள்ளது . இன்று நள்ளிரவு இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது . புகையுடன் வேகமாக தீ பரவியது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் புகார் தரப்பட்டது இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவைப்புதூர்…

Read More

கோவையில் வாக்குச்சாவடிகளுக்கு ‘கலர் கோடிங்’

கோவை மாவட்டத்தில் 3563 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஒரே பள்ளி கூட வளாகத்தில் ஐந்து முதல் எட்டு வாக்குச்சாவடிகள் அமைந்திருப்பதாக தெரிகிறது. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட வேண்டும் என தெரியாமல் குழப்பம் அடையும் நிலைமை இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் ஒரே வளாகத்தில் உள்ள ஓட்டுச் சாவடிகளை அடையாளம் காணும் முறையில் வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது. அந்தப் பகுதியில் வாக்குச்சாவடிகளுக்கான வரிசை எண் அமைத்து…

Read More

வால்பாறை சுற்றுலா வேன் கவிழ்ந்து 9 பேர் சாவு

கேரள மாநிலம் பெருந்தல் மன்னா பகுதியை சேர்ந்த 16 பேர் இன்று வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். பல்வேறு பகுதியை சுற்றிப் பார்த்த இவர்கள் மாலை 5:15 மணிக்கு வால்பாறையில் இருந்து பொள்ளாச்சியை நோக்கி மலைப்பகுதி ரோட்டில் இறங்கிக் கொண்டிருந்தனர். டெம்போ ட்ராவலர் வேன் 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து உருண்டது. சுமார் 800 அடி தூரம் உருண்ட படி சென்ற வேன் 11வது…

Read More

கோவை திமுக கோட்டை… உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு…!

கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் ரோட்டில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது மக்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: நான் இங்கே வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஆனால் இங்கே பார்க்கும் போது நீங்கள் ஏற்கனவே உதயசூரியனுக்கு ஓட்டு போட முடிவு செய்திருப்பது தெரிகிறது. போன தடவை நான் இங்கே வந்தேன் பிரச்சாரம் செய்தேன். ஆனால் நீங்கள் வெற்றி வாய்ப்பு தரவில்லை. ஆனால் இந்த முறை வெற்றி வாய்ப்பு தர வேண்டும். ஒட்டு…

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டு மெஷின்களில் ‘கேண்டிடேட் செட்டிங்’ பணி தீவிரம்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் யார் என கடந்த 9ம் தேதி மதியம் 3 மணிக்கு இறுதி செய்யப்பட்டது. மாவட்ட அளவில் 183 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, சூலூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெயர், சின்னம் அடங்கிய ஓட்டு மெசின் தாள் (பேலட் பேப்பர்) அச்சடிக்க ஆர்டர் தரப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பேலட் பேப்பர் வந்து வந்துவிட்டது….

Read More

கோவையில் 80 லட்ச ரூபாய் மோசடி: இரண்டு பேருக்கு 10 ஆண்டு சிறை…!

ஈரோட்டை சேர்ந்தவர்ஸதர்மலிங்கம் (45). திருப்பூரை சேர்ந்தவர் கணேசன் (50). இவர்கள் இருவரும் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் சிட்ஸ் மற்றும் வெற்றி முருகன் சிட்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை தொடங்கினர். பின்னர் இவர்கள் இருவரும் தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் நிறுவனத்தின் கிளைகளைத் தொடங்கினர். இவர்களிடம் கோவையை சேர்ந்த முதலீட்டாளர்கள் உட்பட 130 பேரிடம் 80 .57 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் தரப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த…

Read More

பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் வரும் 18ம் தேதி கோவை வருகை: போக்குவரத்து மாற்றம்

கோவைக்கு வரும் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரவுள்ளனர். அன்றைய தினம் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரக்கில் மாற்றம் செய்யப்படும். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரிலிருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள்…

Read More