K. V

கோவையில் காரில் தீப்பிடித்து உடல் கருகி வாலிபர் சாவு

கோவை குளத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் விமல் . 22 வயதான தனியார் நிறுவன இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காளியாபுரத்திலிருந்து திருமலையாம்பாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டோரத்தில் பெட்ரோல் குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது இதற்காக குழாய்களை ரோட்டோரம் வைத்திருந்தனர். எதிர்பாரா விதமாக அந்த குழாய் மீது கார் மோதியது . இதில் கார் உடனடியாக தீப்பிடித்தது. காரில் இருந்த இரண்டு பேர் உடனடியாக இறங்கி விட்டனர்….

Read More

கோவை மாவட்டத்தில் 90 தேர்தல் கண்காணிப்பு படை..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு பணி தீவிரமடைந்து வருகிறது. மாவட்ட அளவில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 18000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில் கோவை மாவட்ட அளவில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்கண்காணிப்பு படைகள் தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதி இருக்கிறது .‌ இதில் 90 கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட…

Read More

காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த மாணவன்

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ஜெகன் . 17 வயதான 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இந்த சிறுவன் இன்று காலை சைக்கிளில் தனது வீட்டில் இருந்து காந்திபுரம் மேம்பாலத்துக்கு வந்தார். பாலத்தின் அடியில் சைக்கிளை நிறுத்திய ஜெகன் பாலத்தின் மீது ஏறி அங்கே இருந்து குதித்தார். இதில் கால் மற்றும் முதுகெலும்பு உடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம்…

Read More

நகரை கலக்கும் நடிப்பு சக்கரவர்த்தி…!

கோவை நகரில் பல்வேறு இடங்களில் நடிப்புச் சக்கரவர்த்தி என்ற பட்ட பெயருடன் போஸ்டர்கள் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினி கமல் விஜயகாந்த் அஜித் விஜய் எம்ஜிஆர் சிவாஜி என டாப் லெவல் சூப்பர் ஹீரோ படங்களும் இடம்பெற்றுள்ளது. குகன் சக்கரவர்த்தி என்பவர் வங்காள விரிகுடா என்ற பெயரில் சினிமா படம் எடுப்பதாக தெரிகிறது. இதற்கு மக்களை கவரும் வகையில் போஸ்டர் ஓட்ட வேண்டுமென நினைத்து இந்த மாதிரி செய்திருக்கிறார். கோவை நகரில் ரயில்வே ஸ்டேஷன் ஜிஎச் மற்றும்…

Read More

இந்து முன்னணியினர் சாலை மறியல்

திருப்பூர் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்த போது, இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். கோவில் வருவாய்த்துறை புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி, அதை அகற்றும்படி அரசு அதிகாரிகள் கூறி வந்தனர். அதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோவிலில் இருக்கும் சிலைகளை அகற்ற இன்று காலை வருவாய்த் துறையினர் அங்கு சென்றனர். அதற்கு…

Read More

திமுக மறுபடியும் ஜெயிக்குமா.. மகளிர் குழு சர்வே

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்காக தமிழக அரசின் நலத்திட்டங்களில் மக்களை கவர்ந்தது எது என்பது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் விரைவில் நடக்க உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு செயலி பயன்படுத்தும் முறை தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் குழு பெண்களுக்கு வீடு வீடாக சென்று எப்படி கேள்வி கேட்பது என்ன மாதிரி திட்டங்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பது என்பது தொடர்பான பயிற்சி விளக்கம் வழங்கப்பட்டது. தமிழக…

Read More

அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி, சங்கங்களின் கூட்டமைப்பு கோவை மாவட்ட கிளை சார்பில் குறைந்தபட்ச சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஊழியரின் பணி சுமையை கருதி உடனடியாக நிரப்ப வேண்டும். சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற…

Read More

போலீசுக்கு பூங்கொத்து… ரவுடியாக மாற்றியதால் விவசாயிகள் கெத்து..!

கருமத்தம்பட்டியில் மக்கள் பிரச்சனைக்காக போராடிவரும் எங்களை கஞ்சா போதைப்பொருள் வியாபாரிகள் போல் ரவுடியாக சித்தரித்து விட்டார்கள். எங்களை ரவுடி பட்டியலில் சேர்த்து அசிங்கப்படுத்தி விட்டார்கள் என விவசாயிகள் சங்கத்தினர் கருமத்தம்பட்டி போலீசார் மீது புகார் தெரிவித்துள்ளனர். பலமுறை கூறியும் எங்களை ரவுடி பட்டியலில் இருந்து நீக்க மறுத்து விட்டார்கள் என புலம்பி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி பிரபாகரன் கூறுகையில், “போலீசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் மற்றும் தமிழக…

Read More

சிங்கமே, போர்வாளே… எஸ் பி வேலுமணிக்கு போஸ்டரில் பில்டப்..!

கோவை நகரில் ரயில்வே ஸ்டேஷன் கலெக்டர் அலுவலகம் உக்கடம் மேம்பாலம் அவிநாசி ரோடு மேம்பாலம் என பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் அதிகரித்து வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷவுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர்கள் பல இடங்களில் அவரைப் பற்றி பில்டப் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். அதிமுகவின் போர்வாள் சிறுபான்மையின மக்களின் போர் குரலே, பகைவர்களே ஓடுங்கள் சிங்கம் இரண்டு…

Read More

கோவையில் 4320 பேருக்கு லேப்டாப்..

கோவை மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் 4320 மாணவ மாணவிகளுக்கு இன்று லேப்டாப் வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் லேப்டாப் வாங்கி சென்றனர்.

Read More