K. V

திமுக நிர்வாகியின்‌ எப் எல் 2 பார் மூடி சீல் வைப்பு…!

கோவை மாவட்டத்தில் எப்எல், எப்எல்3 உரிமம் பெற்று 118 பார்கள் செயல்படுகிறது. மாவட்ட அளவில் 229 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ள நிலையில் பாதிக்கு பாதியாக தனியார் பார்கள் துவங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில தனியார் பார்களில் டாஸ்மாக் கடைகள் போல் மதுபான பாட்டில்களை தாராளமாக விற்பனை செய்து வருவதாக தெரியவந்தது. குறிப்பாக மதுக்கரை ரோடு குறிச்சி பேஸ் 2 பகுதியில் திமுக நிர்வாகி பிரபாகரனின் மனமகிழ் மன்ற பார் ஒன்றில் அதிக விதிமுறை…

Read More

கோவை வன அலுவலகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா…

கோவை வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் பட்டாம்பூச்சி பூங்கா ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூங்காவில் நாட்டு வகை தாவரங்களை நடவு செய்து பட்டாம் பூச்சி மற்றும் தேனீக்களை கவரும் வகையில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட வனத்துறை, கியூப் அமைப்பு, ரோட்டரி ஆகியவை இணைந்து செய்துள்ளது. இந்த பட்டாம்பூச்சி பூங்காவின் துவக்க நிகழ்வு இன்று நடந்தது. இதில், மாவட்ட வனஅலுவலர் வெங்கடேஷ் பிரபு பங்கேற்று நாட்டு வகை தாவரங்களை நட்டு வைத்தார். இது குறித்து கியூப்…

Read More

கோவையில் பதுங்கிய திருச்சி ரவுடி கைது…!

கோவையில் பதுங்கி இருந்த திருச்சி ‘ஏ பிளஸ்’ ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்டியர்’ என்கிற சண்முகம் (33). இவர், மீது திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் ‘ஏ பிளஸ்’ ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருச்சியில் இருந்து தலைமறைவான சண்முகம் கோவை வந்துள்ளார். இங்கு கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள மற்றொரு ரவுடியான…

Read More

Drugs ride: 3 நாளில் 2058 குட்கா, 30 கிலோ கஞ்சா 90 குற்றவாளிகள் கைது…

கோவை மாநகரில் கடந்த 3 நாட்களில் அறைகள், விடுதிகளில் போலீசார் சிறப்பு சோதனை நடத்தி 90 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2058 கிலோ குட்கா, 30 கிலோ கஞ்சா உட்பட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின் பேரில் 400க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மோப்பநாய் பிரிவு போலீசார் சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், வடவள்ளி, ஆர்எஸ் புரம் ரேஸ்கோர்ஸ், கோவைபுதூர், போத்தனூர், பீளமேடு உட்பட பல்வேறு இடங்களில் மாணவர்கள்…

Read More

கோவையில் காதலியின் நண்பரை கொலை செய்த 2 பேர் கைது

கோவை தடாகம் ரோடு மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (24). போட்டோகிராபர் இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் போட்டோ சூட் இருப்பதாக தனது குடும்பத்தினருடன் கூறி சில நாட்களுக்கு முன்பு சென்றார். ஆனால் அவர் திரும்ப வரவில்லை. இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் தடாகம் போலீசில் புகார் அளித்தனர். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கிணத்துக்கடவு அருகே ரயில் பாதையில் வாலிபர் சடலம் கிடந்தது. போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை செய்தபோது காணாமல் போன பிரவீன்…

Read More

அலுவலகத்தில் அதிகாரிகளின் செக்ஸ் டார்ச்சர்: கோவை சமூக நலத்துறையினர் விசாரணை…!

கோவை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர் கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013ம் ஆண்டு ஒன்றிய அரசினால் ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அதன் கிளை நிறுவனங்கள் என அனைத்திலும் தனித்தனியான உள் புகார் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இது 5 உறுப்பினர்களைக் கொண்டு இருக்க வேண்டும். உள்புகார் குழு தலைவராக…

Read More

கோவை GH:காண்டம், கருத் தடை மாத்திரை பாக்கெட்டுகள் காணோம்… !

கோவை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மற்றும் மகப்பேறு மருத்துவ பிரிவில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுடன் கணவர், குடும்பத்தினர் பார்வையாளர்களாக தங்கி இருந்து கவனித்து வருகின்றனர். இந்த சிகிச்சை பிரிவுகளில் குழந்தை பேறு தவிர்க்கும் வகையில் காண்டம் பாக்கெட்டுகளை இலவசமாக வழங்க அறிவிப்பு வைத்து அங்கே தனி பெட்டி அமைத்தனர். அதில் காண்டம் பாக்கெட் குவித்து வைத்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த பெட்டி…

Read More

இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்ததால் கொன்றேன்…கோவையில் இளம்பெண் கொடூர கொலையில் கணவர் பகீர் வாக்குமூலம்…!

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் கடந்த வாரம் முட்புதரில் இளம்பெண் சடலம் கிடந்தது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. காலை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பெண்…

Read More

முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க விட மாட்டேன், கவசமாக இருப்பேன்… கோவையில் வைகோ ஆவேசம்…!

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: குறிப்பிட்ட ஒரு பத்திரிகை என்னை புண்படுத்தும் விதமாக கேள்வி கேட்டபோது பொறுமையாக பதில் சொன்னேன். திரும்ப, திரும்ப கேள்வி கேட்கிறார்கள். பத்திரிகையாளர்களுக்கு உள்ள சுதந்திரம் எனக்கும் உள்ளது. எனக்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. நான் வருத்தம் தெரிவித்தேன். மூன்று தினங்களுக்கு முன்பு கருவேல மரங்களை அகற்ற சென்றபோது, மீண்டும் அதே பத்திரிகை நிருபர் புண்படுத்தும் விதமாக கேள்வி…

Read More

மின்வாரியத்தில் பதவி உயர்வில் விதிமுறை மீறல்…!?

கோவை மின்வாரியத்தில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் பணியிட மாறுதல் விவகாரத்தில் மாவட்ட பொறுப்பு அமைச்சரின் தலையீடு இருப்பதாகவும், அவரது சிபாரிசின் பேரில் சில ஊழியர்கள் பணியிட மாறுதல் செய்யாமல் அதே அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மின் பணியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கோவை மின் மண்டலம் உள்பட அனைத்து மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்றவர்கள் பணியிட மாறுதல் மற்றும் விருப்ப இடமாறுதல் பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடத்தில் பணியில் சேர வேண்டும் என…

Read More