K. V

கோவையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய மாணவர் சாவு

தர்மபுரி மாவட்டம் பீடம் நேரி பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார்( 23). இவர் கோவை பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஃபார்ம் படித்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் எட்டு பேருடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார் . அப்போது ஐந்தாவது மலைக்கு சென்ற போது இவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.இதைத் தொடர்ந்து இறந்தவரின் சடலம் டோலி கட்டி மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டது. நடப்பாண்டில் வெள்ளிங்கிரி மலை ஏறிய ஆறு பேர்…

Read More

கோவையில் தேர்தல் பறக்கும் படை சோதனை: டிபன் பாக்ஸ், பாத்திரங்கள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 7 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான…

Read More

கோவை மாவட்டத்தில் 2 நாளில் நாளில் 27 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. அதற்கு பின்னர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 27 பேர் மனு தாக்கல்…

Read More

கோவை மாவட்டத்தில் சென்சிடிவ்ஒட்டு சாவடிகளில் துப்பாக்கியுடன் துணை ராணுவம் பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஒட்டு சாவடிகளை போலீசார், வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டது. கடந்த காலங்களில்…

Read More

தேர்தலுக்கு 48 மணி நேரம் முன் பணம், பரிசு தடுக்க உத்தரவு…!

கோவை மாவட்டத்தில் தேர்தலுக்கு முன் 72 மணி நேரம் செய்ய வேண்டிய முக்கிய பணியில் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்குப்பதிவு நிகழ்வுகளில் கடினமான சூழ்நிலை நிலவக்கூடிய பகுதிகளில் பணியாளர்களை பணி அமர்த்துவதில் மூன்றாவது முறையாக சம வாய்ப்பு முறை ஏற்படுத்த வேண்டும். வாக்கு சாவடிகளில் அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நெருக்கடி நிலை உடைய வாக்கு சாவடிகளில் இரண்டு நிலை போலீஸ் படை, அதாவது உள்ளூர் போலீஸ், துணை ராணுவம் இருக்க…

Read More

G square நிறுவனம் மீது மோசடி புகார்…

கோவையை சேர்ந்தவர் ரவிக்குமார் (60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவர் சவுரி பாளையம் பகுதியில் ஆர்த்தி ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான 16 ஏக்கர் நிலத்தை 258 கோடி ரூபாய்க்கு ஜி ஸ்கொயர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு புரோக்கிங் செய்து வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி 16 ஏக்கர் நிலம் வெள்ளலூரில் உள்ள சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி…

Read More

கோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…!

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்களுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்திற்கு மட்டும் இதுவரை 32 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று காலை இமெயிலில் ஆர் எஸ் புரம் டிபி ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம், ரயில் நிலையத்தில் உள்ள தபால் அலுவலகம் கோவை மாவட்டத்தில் ஆறு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பீளமேடு பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம்…

Read More

தேர்தலில் ஓட்டு போட 12 ஆவணங்கள் பயன்படுத்த அனுமதி…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் போது வாக்காளர் அடையாளம் காணும் செயல்முறைகள் குறித்து கீழ்கண்ட வழிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்காளர்கள் 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 62-ஆம் பிரிவின் கீழ் அவர்களுடைய உரிமையை மிகவும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்காக, வாக்காளர்கள், ஆள்மாறாட்டம் செய்யப்படுவதைத் தடுக்கிற நோக்கத்துடன், 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் 61-ஆம் பிரிவு வழிவகை செய்துள்ளது. வாக்குப்பதிவின்போது,…

Read More

கோவையில் வீட்டிலிருந்து ஓட்டு போட ஏற்பாடு…

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் படி மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒட்டு பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், அவர்கள் வரிசையில் நின்றிருக்கும் நிலையில், வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். வாக்காளர்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு…

Read More

கோவை சிறையில் கைதிகள் மோதலால் பரபரப்பு…!

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பி பிளாக் 29 வது பிரிவில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விலாங்கட்டூரை சேர்ந்த சகாதேவன் (33) என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். . இவர் திருப்பூரில் குற்ற வழக்கு தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவர் கோவை மத்திய சிறைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார். சகாதேவன் அடைக்கப்பட்டு இருந்த பிளாக்கில் பார்த்தா என்கிற சிரஞ்சீவி (35)…

Read More