K. V

பாரதியார் பல்கலையில் பிஎச்டி விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு…

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி முழு நேரம், பகுதி நேர படிப்புகளுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வரும் 9ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பகுதி நேரம் மற்றும் முழுநேர பிஎச்.டி ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர பல்கலை.யின் www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது….

Read More

கோவையில் யூரியா மூட்டை கடத்தலுக்கு உதவிய அதிகாரிகளை தப்ப வைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு…

கோவை மதுக்கரை பகுதியில் விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா உரத்தை டன் கணக்கில் கடத்தி, ரகசியகுடோனில் திரவமாக மாற்றி கேரளாவுக்குக் கடத்த முயன்றதாக புகார் வந்தது. மதுக்கரை வழுக்குபாறை தமனா தோட்டம் மற்றும் ரொட்டி கவுண்டன் புதூரில் சோதனை நடந்தது. இதில் 43 லட்ச ரூபாய் மதிப்பிலான 128 டன் எடையிலான யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இங்கே யூரியா மூட்டைகள் கடத்தி வந்து பதுக்கி வைத்து…

Read More

சூலூர் சிறப்பு எஸ்ஐ தூக்கில் தற்கொலை

கோவை மாவட்டம் நீலாம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ் ஐ ஆக வேலை செய்து வந்தவர் அப்புன்னி என்பவரின் மகன் மனோஜ் ( 54). இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சங்கரமங்கலம். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்து உள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சிந்து ( 49 ) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மனைவி மற்றும் மகன்கள் கடந்த ஒரு வருடமாக…

Read More

பெற்ற தாயை கடித்து குதறிய கொடூர மகன் கைது

கோவை ஆர்.எஸ்.புரம், அருணாச்சலம் ரோடு கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவரது மகன் ஹரிபிரசாத் (22). கடந்த 29ம் தேதி காலை, ஜெயந்தி தனது மகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது, அங்கு வந்த ஹரிபிரசாத், தனது மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்யுமாறு தாயிடம் கேட்டுள்ளார். ஹரிபிரசாத் மூன்று வெவ்வேறு எண்களை பயன்படுத்தி வந்ததால், “எந்த எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்?” என்று ஜெயந்தி கேட்டுள்ளார். இதனால் ஹரிபிரசாத், தாயிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தகாத…

Read More

900 பவுன் தங்க நகையை அபகரிப்பு: டாக்டர் மீது வழக்கு

கோவை கணபதி மாநகர் எஸ்.ஆர்.வி‌ நகரை சேர்ந்தவர் சண்முகபாண்டியன் (67). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . இவரது இளைய மகள் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சார்ந்த முருகேசன் என்பவரது மகன், டாக்டராக பணிபுரிந்து வந்த விக்னேஷ் என்பவருக்கு சண்முகபாண்டியன் தனது இரண்டாவது மகளை கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணம் முடிந்தவுடன் முருகேசன், தனது மனைவி வாசுகி, மகள் ஜீவிதா ஆகிய 3 பேருடன்…

Read More

கோவையில் டன் கணக்கில் யூரியா கடத்தி பதுக்கல்: விவசாயிகள் முற்றுகை…!

விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியா உரத்தை டன் கணக்கில் கடத்தி, ரகசியக் குடோனில் திரவமாக (Liquid) மாற்றி கேரளாவுக்குக் கடத்த முயன்றதாக புகார் வந்தது. மதுக்கரை வழுக்குபாறை தமனா தோட்டம் மற்றும் ரொட்டி கவுண்டன் புதூரில் சோதனை நடந்தது. இதில் வழுக்குபாறையில் சுமார் 90 டன் எடையில் 20 ஆயிரம் மூட்டைகளில் யூரியா இருந்தது. மேலும் திரவமாக மாற்றப்பட்ட யூரியா கம்பெனியில் வைக்கப்பட்டிருந்தது. ரொட்டி கவுண்டனூரில் 240 மூட்டைகளில் யூரியா மூட்டைகள் தோட்டத்து…

Read More

கோவையில் முதியோர்களுக்கு டார்ச்சர்: 2 காப்பக வார்டன் மீது நடவடிக்கை…

கோவை மாவட்டத்தில் 319 மகளிர் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளது. இந்த விடுதிகளில் பெண்கள் பாதுகாப்பு, தரமான உணவு, அடிப்படை வசதிகள் உள்ளதா என சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி கண்காணிப்பு பணி நடத்தப்படுகிறது. தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள் உரிய நேரத்திற்குள் விடுதிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தகவல் தெரிவிக்காமல் மகளிர் விடுதியை விட்டு…

Read More

கோவையில் சுமார் 50 குவாரிகளுக்கு அபராதம் விதிக்க திட்டம்…!

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகள் தொடர்பாக கனிம வளம் மற்றும் புவியியல் துறையின் சார்பில் ட்ரோன் சர்வே நடத்தப்பட்டு வருகிறது . கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்டு வரும் இந்த சர்வே மூலமாக கனிம வள கொள்ளை மற்றும் முறைகேடுகளை கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் 160 கல்குவாரிகள் இருக்கிறது. இதில் 20 கல்குவாரிகளில் ஏற்கனவே கடந்த திமுக ஆட்சி காலத்தில் ட்ரோன் சர்வே ஆய்வு நடத்தப்பட்டது . தற்போது 140 கல்குவாரிகளில் ஆய்வு நடந்த…

Read More

கஞ்சி சோறு, தண்ணி குழம்பு… அம்மா உணவகத்தில் அவலம்…!

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 15 அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது .‌ கோவை அரசு மருத்துவமனை வளாகம், காந்திபுரம், உக்கடம் , குனியமுத்தூர் , சிங்காநல்லூர் பீளமேடு உள்பட பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது . கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவகங்கள் பழுதடைந்து அசுத்தமாக காணப்படுவதாக புகார் இருந்தது. இதைத் தொடர்ந்து மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையினர் ஆய்வு நடத்தி அம்மா உணவகங்களை சீரமைக்க டெண்டர் விட்டு பணிகளை துவக்கி…

Read More

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை கோவை குற்றாலம் மூடல்…!

கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் அதிக மழை பெய்து வருகிறது .சிறுவாணி சின்ன கல்லாறு சோலை ஆறு உடுமலை திருமூர்த்தி மலை பிஏபி பில்லூர் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழை பெய்து வருகிறது. சிறுவாணி அடிவார வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் அமைந்துள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. அருவி மற்றும் ஓடையில் நீர்வரத்து உச்சத்தை எட்டியுள்ளது . ஓடையில்…

Read More