K. V

கோவையில் செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கோவை பீளமேடு ரங்கம்மாள் கோவில் வீதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் ஒரு வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று மதியம் இந்த பகுதி மக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க முயன்றனர்….

Read More

கோவையில் இன்ஸ்டா மோகம் : மாயமான 4 சிறுமிகள் மீட்பு…

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இவர்கள் வீட்டிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் நேற்று இரவு மாயமானதாக தெரியவந்தது . பதறிப்போன பெற்றோர்கள் இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். 12 வயதான சிறுமிகள் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் இவர்களை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் புகாரில் தெரிவித்தனர். போலீசார் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தேடிய போது சிறுமிகள் நான்கு பேரும் போத்தனூர்…

Read More

கோவையில் ‘ஷேடோ அப்சர்வேஷன் ரிஜிஸ்டரில் ‘ வேட்பாளர்கள் செலவு கணக்கு கண்காணிப்பு…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் பிரதான கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட, பதிவு பெற்ற கட்சிகள் சார்பில் சுமார் 100 பேர் முதல் 150 பேர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமான வேட்பாளர்களை தொடர்ந்து கண்காணிக்க, கணக்கு விவரங்களை பெற ஷேடோ அப்சர்வேஷன் ரிஜிஸ்டர் (எஸ்ஓஆர்) என்ற நிழல் கவனிப்பு பதிவேடு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டத்தில் வேட்பாளர்களை தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழு நிழல் போல் கவனிக்க வேண்டும். செய்யும் செலவுகளை…

Read More

சுயேச்சை வேட்பாளர்களுக்கு 7ம் தேதி சின்னம் ஒதுக்கீடு…!

கோவை மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் சின்னம் ஒதுக்கீடு செய்யும் வரை பெயரை சொல்லி ஓட்டு கேட்க நிலை இருக்கிறது. தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 184 சின்னங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் 3 சின்னங்கள் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. விசில் சின்னம் சுயேட்சை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்திற்கு இந்த சின்னம் வழங்கப்படும். எதாவது தொகுதியில் இந்த சின்னத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் போட்டியிடாமல் இருந்தால்…

Read More

கோவையில் அண்ணாமலை போட்டியா…!? திமுகவினர் அதிர்ச்சி

பைல் படம் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு 27 இடங்கள் ஒதுக்கீடு செய்து அதிமுக அறிவித்துள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என முடிவு செய்யப்படவில்லை. கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல் பரவியது. கோவைக்கு நரேந்திர மோடி வந்த போது வரவேற்பதற்காக அண்ணாமலை வரவில்லை. வரவேற்பு…

Read More

கோவையில் பறக்கும் படை சோதனை: அப்சர்வர்கள் பரிசோதனை

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 15ம் தேதி முதல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பறக்கும் படைகளின் நடவடிக்கைகளில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக புகார் இருந்தது. முறையான ஆவணங்கள் இருந்தாலும் பொருட்கள் மற்றும் பணத்தை விடுவிப்பதில்லை. பொதுமக்களை அலைய வைக்கும்…

Read More

தமிழக தேர்தலில் ‘விசில்’ சுயேச்சை சின்னமாக தேர்தல் கமிஷன் அறிவிப்பு…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் விசில் சின்னம் சுயேச்சை சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர்களுக்காக 184 சின்னங்கள் தேர்தல் செய்து தேர்தல் கமிஷன் கடந்த 30ம் தேதி அறிவித்தது. இதில் ஏசி, அலமாரி, நடை வண்டி, பலூன், வளையல், பேட், பேட்ஸ்மேன், பேட்டரி டார்ச், நெக்லஸ், பெல்ட், பெஞ்ச், சைக்கிள் பம்பு, பைனாகுலர், பிஸ்கட், கரும்பலகை, படகு, பாக்ஸ், ரொட்டி,…

Read More

கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம்

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் இபி காலனி பகுதியை சேர்ந்தவர் (53). கூலித் தொழிலாளி. இவர் மனைவி ஜெய் ஸ்ரீ (43) இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் கிடையாது . முரளி மது போதை பழக்கம் உள்ளவர் .அடிக்கடி மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்தார். கடந்த 28ம் தேதி முரளிக்கும் அவர் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெய்ஸ்ரீ குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்று…

Read More

கோவை யார் கோட்டை என மே 4ம் தேதி தெரியும் செந்தில் பாலாஜி சவால் பேட்டி…

கோவை காந்திபுரம் செம்மொழி பூங்கா அருகே திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் திமுக முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவதுநான் தேர்தல் களத்தை பார்த்து பயந்தவன் கிடையாது. எப்போதும் நான் தைரியமாக பணி செய்வேன்அரவக்குறிச்சி தொகுதியில் நின்று வெற்றி பெற்றேன். அதே போல் கரூர் தொகுதியில் வெற்றி பெற்று இருக்கிறேன். தற்போது கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு…

Read More

கோவை மாவட்டத்தில் 15 பேர் வேட்பு மனு தாக்கல்…

கோவை மாவட்டத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாவட்ட அளவில் 15 பேர் மனு தாக்கல் செய்தனர். தொண்டாமுத்தூரில் நாம் தமிழர் கட்சி உள்பட 3 பேர் மனு…

Read More