கோவையில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம்

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் இபி காலனி பகுதியை சேர்ந்தவர் (53). கூலித் தொழிலாளி. இவர் மனைவி ஜெய் ஸ்ரீ (43) இவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

குழந்தைகள் கிடையாது . முரளி மது போதை பழக்கம் உள்ளவர் .அடிக்கடி மது போதையில் தனது மனைவியுடன் தகராறு செய்து வந்தார். கடந்த 28ம் தேதி முரளிக்கும் அவர் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெய்ஸ்ரீ குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் ஜெய்ஸ்ரீக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு சென்று பார்த்த போது முரளி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

சடலம் அழுகிய நிலையில் இருந்தது.
மனைவி தகராறு செய்து சென்ற நிலையில் முரளி தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது.
இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *