K. V

டாஸ்மாக் சரக்கு ஒரிஜினலா… புதுசா வந்தாச்சு ஹலோகிராம் ஸ்டிக்கர்…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களில் போலியை கண்டறியும் வகையிலான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. மாநில அளவில் டாஸ்மாக் மதுபானங்களில் ஒட்டுவதற்கு புதிய ஒளிரும் தன்மை கொண்ட ஹாலோகிராம் ஸ்டிக்கர் உருவாக்கப்பட்டுள்ளது. போலி மதுபானங்களை கண்டறிய உண்மையான மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்காக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலால் துணை கமிஷனர் சாதனை குரல் தலைமையில்…

Read More

மதுக்கரையில் கொல்லப்பட்ட பெண் யார்?விபச்சாரிகளிடம் போலீசார் விசாரணை

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கடந்த 24ம் தேதி கண்டறியப்பட்டது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. இது தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பெண் கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த பெண்…

Read More

கோவை புதிய சிறை கட்ட ஏழை மக்களின் நிலங்கள் கையகப்படுத்த நோட்டீஸ்…

கோவை காந்திபுரத்தில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையை காரமடை பிளிச்சி பகுதிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே பிரமாண்டமான சிறை கட்டப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டில் பணி முடியும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சிறை கட்ட அந்த பகுதியை சேர்ந்த சில ஏழை மக்களின் நிலம் கட்டாயப்படுத்தி பெறப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக ஒன்னிபாளையம் ஜோதிமணி, பிரேமா உள்ளிட்ட சிலரின் நிலங்களை வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்து பெற…

Read More

உரிமைத்தொகை கேட்டு மகளிர் முற்றுகை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி தலைமையில் இன்று நடந்தது. இதில் சிங்காநல்லூர் போயர் வீதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (70) அளித்த மனுவில், “சிங்காநல்லூரில் உள்ள எனது நிலத்தில் பக்கத்து வீட்டு நபர் வீடு கட்டி வருகிறார். நான் கேட்ட போது, நான் அப்படி தான் கட்டுவேன், அதை யாரும் தடுக்க முடியாது எனக்கூறி மிரட்டினார். நான் போலீசில் புகார் அளித்த போது போலீசார் புகார்…

Read More

இலவச மனை பட்டா வீடு கேட்டு 764 பேர் மனு…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில், அம்பேத்கர் மக்கம் விடுதலை கழகம் தலைவர் ரங்கநாதன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், “கீரணத்தம் ஆதிதிராவிடர் காலனியில் 15 ஆண்டிற்கும் மேலாக வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். மணியக்காரன்பாளையம் கக்கன் வீதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. அதிகாரிகளிடம் புகார் கூறியும் குடிநீர் வழங்கவில்லை. கோவில்பாளையம் பகுதியில் 45 சி என்ற ஒரே ஒரு பஸ்தான் இயங்கி வருகிறது….

Read More

காம்பஸ், மயிர் கோதியால் மிரட்டி பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்த சைக்கோ…

கோவை மதுக்கரை மலைசாமி கோயில் வீதி பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண்கள் இல்லாத வீட்டில் மர்ம நபர் ஒருவர் கதவைத் தட்டி புகுந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பகுதி பொதுமக்கள் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வாரம். பெண் ஒருவர் நள்ளிரவில் தனியாக தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அந்த மர்ம நபர் அந்த…

Read More

கோவை பைபாஸ் ரோட்டில் இளம் பெண் பலாத்கார கொலை: துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல்

கோவை மதுக்கரை சுகுணாபுரம் வெஸ்டர்ன் பைபாஸ் ரோடு துவங்கிய இடத்திலிருந்து சில தூரத்தில் முட்புதரில் இளம்பெண் சடலம் கடந்த 24ம் தேதி கண்டறியப்பட்டது. சுமார் 25 வயது மதிக்கத்தக்க உடலில் ஆடை எதுவுமில்லாத நிர்வாண நிலையில் அழுகிப்போய் இந்த சடலம் கிடந்தது. அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் சடலம் கிடப்பதை பார்த்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பெண் கற்பழித்து…

Read More

முத்தண்ண குளத்தில் செத்து மிதந்த மீன்கள்…

கோவை தடாகம் ரோடு முத்தண்ண குளத்தில் இன்று மீன்கள் அதிகளவு செத்து மிதந்தன. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கே சென்று பார்த்து ஆய்வு செய்தனர். குளத்தில் நச்சு கழிவுகளின் தாக்கம் அதிகமானதால் மீன்கள் இறந்து மிதப்பதாக கூறப்பட்டது. தொழிற்சாலை கழிவுகள் குளத்தில் கலந்து விட்டதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நீரில் பி.எச் அளவு ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது….

Read More

ஓவர் லோடு: 33 லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் கனிம பொருட்கள் கொண்டு செல்வதில் விதிமுறை மீறல் இருப்பதாக புகார் வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு மாநகர் மற்றும் மாவட்டத்தில் போலீசார் ஒருங்கிணைந்த சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரே நாளில் 33 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மணல், கிராவல், ஜல்லி உள்ளிட்ட கனிமப் பொருட்களை அதிக எடையில் விதிமுறை மீறி கொண்டு சென்றது தெரியவந்தது. இந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். லாரிகளில் மூன்று யூனிட் குறைவாக…

Read More

பொதுப்பணித்துறை குளங்களை குத்தகைக்கு வாங்கி நாசமாக்கிய கோவை மாநகராட்சி…

கோவையில் குளங்கள் சாக்கடை பள்ளமாக மாற்றி, கரையில் ஓட்டல், கடைகள் நடத்த அனுமதி வழங்கிய மாநகராட்சியினர் மீது பொதுப்பணித்துறை நிர்வாகம் அதிருப்தியில் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் 32 குளங்கள், 20 தடுப்பணை இருந்தது. இதில் கடந்த 20 ஆண்டிற்கு முன் அம்மன் குளம், மண்ணரை குளம் உட்பட 4 குளங்கள் பயன்பாடின்றி அழிந்து போனது. சில குளங்களின் நீர் தேக்க பரப்பு குறைந்து வருகிறது. 38 ஏக்கர் பரப்பிலான அம்மன் குளம் பொதுப்பணித்துறை வசம் இருந்து நகர்ப்புற…

Read More