K. V

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு 7.69 படிவங்கள் தயார்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. 10 தொகுதிகளுக்கும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் நாளை முதல் வரும் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அரசு விடுமுறை நாளில் மனு தாக்கல் செய்ய முடியாது. இதற்காக சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வேட்பு மனு தாக்கல் படிவம் நாமினேஷன் பேப்பர் என அழைக்கப்படும் வேட்பு மனு தாக்கல் படிவங்கள் (பார்ம் 2…

Read More

அண்ணாமலை அடுத்த பிளான்: திமுக வட்டாரத்தில் திகைப்பு…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 27 இடங்களில் போட்டியிடுகிறது.இதில் கோவை மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட போகிறது. தமிழகத்தில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்ய தேர்தல் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இதில் தேர்தல் குழுவின் இணைச பொறுப்பாளராக மத்திய சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால் நியமிக்கப்பட்டுள்ளார் . இவர் நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் இவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர்…

Read More

கோவை காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்த வாலிபர் பலி…

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பாலத்தில் நிறுத்திய அவர் திடீரென மேலே இருந்து கீழே குதித்தார் . இதில் கால்கள் முறிந்த நிலையில் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். விசாரணையில் அவர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (40) என தெரிய வந்தது. இவர் அறக்கட்டளை…

Read More

கோவை ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேர் கைது…

கோவை ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தல் அதிகமாக நடப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீ சார் தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்து வந்தனர் . நேற்று மாலை கோவை ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரம் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர் .அப்போதுஅந்த வழியாக பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் (27) மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த சிந்து (37) ஆகியோர்…

Read More

கோவையில் தங்க கட்டி வாங்கி மோசடி: பாஜக நிர்வாகி கைது

கோவை ராஜவீதி பகுதியில் தங்க நகை கடை நடத்தி வருபவர் லட்சுமி நரசிம்மர் ராஜ். இவரிடம் உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த தங்கப்பட்டறை நடத்திவரும் மனோகரன் (35) என்பவர் கடந்த ஆண்டு 141 கிராம் எடையில் சொக்கத்தங்கம் வாங்கினார் . இதனை ஆபரணமாக செய்து தருவதாக அவர் வாங்கியுள்ளார். ஆனால் பல மாதமாகியும் அவர் தங்க நகை செய்து தரவில்லை. தான் வாங்கிய தங்கத்தையும் திருப்பித் தரவில்லை. இது தொடர்பாக லட்சுமி நரசிம்மர் ராஜ் கேட்டபோது…

Read More

தேர்தல் பறக்கும் படை பணம் பறிமுதல் அதிகரிப்பு…

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 27 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் இதுவரை 5.04 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருள்களை தேர்தல்…

Read More

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு நிறைவு

கோவை மாவட்டத்தில் 26.98 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க ஆன்லைன், ஆப்லைன் மூலமாக பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டது. www.voters.eci.gov.in என்ற வெப்சைட்டில் ஆதாரங்களுடன் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐஆர் என்ற சுருக்க திருத்த பணிகள் முடிந்த சுமார் 1.22 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து இதுவரை 6.50 லட்சம் பேர் பட்டியலிருந்து நீக்கப்பட்டனர். மாவட்ட அளவில் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களும்,…

Read More

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கோவையில் 10 புகார் பதிவு…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை பெற கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் 10 சட்டமன்ற தொகுதிகள் கண்காணிக்கப்படுகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண், 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண்கள்…

Read More

ஓட்டு போட ராட்சத பலூனில் விழிப்புணர்வு..

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டு போட வலியுறுத்தி மாவட்ட தேர்தல் பிரிவின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கப்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பவன்குமார் வாகனத்தை துவக்கி வைத்தார். இந்த வாகனம் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று, வாக்காளர் விழிப்புணர்வு குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும். பார்முலா கார் ரேசர் நரேன் கார்த்திகேயன், கோவை…

Read More

வேட்பு மனுக்கள் நிராகரிக்க நிபந்தனைகள் விதித்து உத்தரவு

கோவை கோவை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் சட்ட மன்ற தொகுதிகள் வாரியாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் எந்தெந்த சட்ட மன்ற தொகுதிக்கு எங்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் மே தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. அரசு விடுமுறை நாட்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. அலுவலக நாட்களில் காலை 11 மணி…

Read More