K. V

மக்களை தேடி பணியாளர்களுக்கு சம்பளம் தரலை….

கோவை கலெக்டர் அலுவலகம் முன் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் பொது செயலாளர் மகாலட்சுமி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தில் சர்க்கரை நோய் பரிசோதனை, மருந்து பெட்டகம் வீடுகளுக்கு சென்று வழங்குதல் போன்ற பணியில் கடந்த 5 ஆண்டுகளாக மாதந்தோறும் ரூ.5,500 ஊக்க தொகை அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். கடந்த அரசு பொறுப்பில் இருந்த போது நேஷனல் ஹெல்த்…

Read More

Avin app: முறைகேடு ஊழல்: ஆவின் முகவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார்…

Chief reporter…கலைவாணன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநகர் மாவட்ட தலைவர் லிங்கம் தலைமையில் ஆவின் முகவர்கள் நேற்று கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கோவை ஆவின் பால் ஒன்றியத்தில் முகவர்கள் 700 பேர் மூலமாகவும். தயிர் 40 ஏஜென்சிகள் மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனுடைய வரவு செலவ சம்பந்தப்பட்ட பால் விற்பனை ஆர்டர்,பால்விற்பனை கமிஷன் தொகை மேலும் ஆவின் நிர்வாகம் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் அனைத்தும் கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய…

Read More

மின்வாரியத்தில் லஞ்சம்: கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் …!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை கணபதி மற்றும் பல்வேறு பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர்கள் அளித்த புகார் மனுவில், ” பயணிகள் ஆட்டோக்களில் சிலர் வணிக சரக்குகள் ஏற்றி செல்வதாக தெரியவந்துள்ளது. இதனால் சரக்கு ஆட்டோக்களின் வாடகை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கும், விதிகளுக்கும் மாறாக இப்படி செய்வது அதிகமாகி விட்டது கேரளா மற்றும் கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனங்கள் கோவையில் உள்ளூர் வாடகை அடிப்படையில்…

Read More

பெற்ற மகனை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை.. .

கோவையில் தங்கள் உறவுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவனை அடித்துக் கொடுமைப்படுத்திக் கொலை செய்த வழக்கில், தாயுடன் தகாத உறவில் இருந்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பெற்ற தாய்க்கு ஆயுள் தண்டனையும் விதித்து கோவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோவை வடவள்ளி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் அருண் (38). தனியார் மருத்துவமனை ஊழியரான இவருக்கும், திவ்யா (32) என்ற பெண்ணுக்கும் திருமணமாகி அபிஷேக்…

Read More

நீட் தேர்வு ரொம்ப கஷ்டம்… கோவையில் மாணவிகள் புலம்பல்…

கோவையில் இன்று நீட் மறுதேர்வு நடந்தது. இதில் 7,092 பேர் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மாவட்டத்தில் இதற்காக 15 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. அரசு கலைக் கல்லூரி, எஸ்ஜிஆர் கல்லூரி, நிர்மலா கல்லூரி, பிஎஸ்ஜி கல்லூரி, கொங்குநாடு கல்லூரி, அவிநாசிலிங்கம் கலைக்கழகம் உள்ளிட்ட 15 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இந்த மாதம் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 6 ஆயிரத்திற்கும் மற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர் கோவை மாவட்டத்தில் இந்த…

Read More

Coimbatore junction: வடக்கர்களுக்காக உருவாச்சு தனி ரூட்…

கோவை ரயில் நிலையத்தில் தாமஸ் கிளப் பகுதி வழியாக லக்கேஜ் கொண்டு செல்ல தனி பாதை உருவாக்கி இருப்பது பயணிகளுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் தரக்கூடிய பிரதான ரயில் நிலையமாக கோவை இருக்கிறது ஆனால் கட்டமைப்பு, பிளாட்பாரம், பார்க்கிங், பயணிகள் வசதிகளில் கோவை ரயில் நிலையம் மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. பிளாட்பாரங்களில் ரயில் நகர்ந்தால் தான் அடுத்து ரயில் வந்து நிறுத்த முடியும் என்கிற பரிதாப நிலைமை தொடர்கிறது. ரயில்…

Read More

கோவை மத்திய சிறையில் கஞ்சா: போலீசார் அதிரடி ரெய்டு…!

கோவை மத்திய சிறையில் கோவை மாநகர போலீசார் இன்று காலை முதல் திடீர் சோதனை ஈடுபட்டனர். சிறையில் உள்ள கைதிகள் கஞ்சா மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் பாலியல் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பிளாக் , விசாரணை கைதிகள் உள்ள வளாகங்களில் போலீசார் சோதனை செய்தனர் . சிறையில் உள்ள கழிவறைகள், உணவு தயாரிப்பு கூடம் மற்றும் மைதானங்களில் மண்ணைத்…

Read More

மீடியா டவருக்கு மவுசு… போலீசாருக்கு ரவுண்ட்ஸ்

கோவை மாநகராட்சி சார்பில் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல நூறு கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்தது. உக்கடம் பெரியகுளத்தின் கரை சீரமைக்கப்பட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் வாக்கிங் தளம், விளையாட்டு பூங்கா, சைக்கிளிங் பாதை போன்றவை உருவாக்கப்பட்டது. ஐ லவ் கோவை என பிரமாண்ட ஐகான் ஏற்படுத்தப்பட்டது. உக்கடம் வாலாங்குளம் வாக்கிங் தளம், படகு துறை, குளங்களின் நடுவே உருவாக்கப்பட்ட தீவு திடல், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட டான்சிங் நீர் ஊற்று, வாக்கிங் தளம்…

Read More

ITI admission… கோவை மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை

கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் அப்பேரல் தொடர்புடைய தொழிற்பிரிவுகள், டிரோன் பைலட், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெகிக்கிள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு 2026 ம் ஆண்டிற்கான ஆன்லைன் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. 8, 10, 11, 12 ம் வகுப்பு மற்றும் டிகிரி, டிப்ளமோ படித்த 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் இப்பயிற்சியில்…

Read More

நிதி நிலைமை சீரான பின் 2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை:அமைச்சர் அருண்ராஜ் தகவல்…!

தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக இரண்டு மாணவிகள் தற்கொலை செய்தது பெரும் வலியை அளிப்பதாக கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. விழாவில், கல்லூரி முதல்வர் வீரமணி தலைமையுரை ஆற்றினார். மாவட்ட கலெக்டர் பவன்குமார் முன்னிலை வகித்தார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்று 100 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத், சட்டமன்ற…

Read More