K. V

சிறுவாணி அணையில் விரிசல்: நீர் கசிவு தடுக்க ரூ.64 கோடி செலவிட திட்டம்…

கோவை சிறுவாணி அணை சீரமைக்க 64 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கேரள அரசு தமிழக குடி நீர் வடிகால் வாரியத்திடம் வலியுறுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் சிறுவாணி அணையின் மேம்பாட்டு திட்டம் தொடர்பான இரு மாநில அதிகாரிகளின் கூட்டு குழு கூட்டம் நடந்தது. இதில் கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள், தமிழக குடிநீர் வடிகால் வாரியம், கோவை மாநகராட்சி மற்றும் பாலக்காடு மாவட்ட நிர்வாகத்தினர் பங்கேற்றனர். இதில் சிறுவாணி அணையின் பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து…

Read More

Road damage: தரம் கெட்ட தார் ரோடு… வாகனங்கள் படாதபாடு…

கோவை மாவட்டத்தில் 483.5 கி.மீ தூர மாநில நெஞ்சாலை, 531 கி.மீ தூர மாவட முக்கிய ரோடு (MDR), 1492,8 கி.மீ தூர இதர கிராம ரோடு (ODR) என 25074 கி.மீ தூரத்திற்கு ரோடு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு வழிப்பாதையாக 604,5 கி.மீ தூர ரோடு, இடை வழிப்பாதையாக 329.8 கி.மீ தூர ரோடு, இரு வழிதட பாதையாக 640 கி.மீ தூர ரோடு, பாவு தள இரு வழிப்பாதையாக 262.2 கி.மீ தார் ரோடு,…

Read More

convict treatment: கோவை ஜி. எச்சில் கைதிகள் வார்டு ரொம்ப மோசம்…

கோவை அரசு மருத்துவமனையில் சிறை கைதிகள் சிகிச்சைக்காக தனி பிரிவு (கான்விக்ட் வார்டு) அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த வார்டு பழுதாகி கிடக்கிறது. பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு ஒதுக்கப்பட்ட ஒய்வறை கழிவறையை விட மோசமான நிலையில் இருக்கிறது. இந்த அறையை போலீசார் பயன்படுத்த தயக்கம் காட்டி வருகிறார்கள். கைதிகள் வார்டு நவீன பாதுகாப்பு வசதிகளுடன் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. கைதிகள் அடிக்கடி தப்பி செல்வதால், சிறையில் உள்ளது போல்…

Read More

New born child death : ரோட்டில் வீசப்பட்டு இறந்து கிடந்த 5 மாத ஆண் குழந்தை…

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் அலுவலராக பணிபுரிந்து வருபவர் கலைவாணி (30). இவர் இன்று பணியில் இருந்தபோது, பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் போன் செய்துள்ளார். அவர் பழையூர் நியூ சித்ராம்பலம் லே-அவுட், பகுதியில் சாலையோரத்தில் ஒரு குழந்தை சடலமாக கிடப்பதாகக் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கலைவாணி, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்கு சுமார் 5 மாத ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தார். அவரது…

Read More

Illegal affair:தொழிலாளி அடித்து கொலை செய்து சடலத்தை ரோட்டில் வீசிய கொடூரம்…

கோவை வேலாண்டிபாளையம் கோவில் மேடு பகுதியை சேர்ந்தவர் மணி (40). இவர் கூலிக்கு ஆள் பிடித்து விடும் புரோக்கர் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் கூலி முக்கு அருகே வேலைக்கு காத்திருக்கும் தொழிலாளர்களை பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்காக அனுப்பி வந்தார். மணிக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். மணி கட்டிட வேலைக்கு பெயர் விவரம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க நபரை வேலைக்கு அனுப்பினார். அந்த நபர் அடுத்த நாள் வேலை கேட்டு மணியின் வீட்டுக்கு…

Read More

guideline value: தமிழகத்தில் விரைவில் புதிய வழிகாட்டி மதிப்பு அமலாக்க உத்தரவு…

தமிழகத்தில் கடந்த 2023 ம் ஆண்டு பத்திர பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு (guideline value) உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டது. மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக மாநில அளவில் 578 சார் பதிவாளர் அலுவலகங்களில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் தொடர்பான ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் ஓரிரு மாதங்களில் புதிய வழிகாட்டி மதிப்பு நடைமுறைக்கு கொண்டு வர ஏற்பாடு…

Read More

கோவை சென்ட்ரல் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை செய்தனர். அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இடைத்தரகர்கள் வாகனங்கள் போன்றவற்றில் போலீசார் சோதனை செய்தனர் இதில் கணக்கில் வராத சுமார் 64 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு மற்றும் தகுதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொதுமக்களிடம் இருந்து இடைத்தரகர்கள் மூலமாகப் பெருமளவில் லஞ்சப் பணம் கைமாறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின்…

Read More

நீட் தேர்வினால் மாணவி தற்கொலை கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி அனு கீர்த்தனா. நீட் மறு தேர்வு காரணமாக இன்று மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மற்றும் தெற்கு ஆர்டீ ஓ மாருதி பிரியா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இறந்த மாணவியின் குடும்பத்தினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவிகளுக்கு…

Read More

Tamil Nilam app: நத்தம் ரயத்துவாரி நிலம் எங்கே…

தமிழக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை மூலமாக www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கியுள்ளது. அதில், பட்டா மாறுதலுக்கான – தமிழ் நிலம் செல்போன் செயலி இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் செய்வதற்கான விண்ணப்பிக்க ஏதுவான https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த, தமிழ்நிலம் (ஊரகம்), மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டது….

Read More

7th finance commission: கோவை ஊராட்சிகளில் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 7th finance committee (7வது நிதிக்குழு கமிஷன்) அதிகாரிகள் நாளை கோவை மாவட்டத்தில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் திட்ட பணிகள் நடக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. நிதி இல்லாமல் பெரும்பாலான பணிகள் முடங்கி போய் கிடப்பதாக தெரிகிறது. மாவட்ட அளவில் ஒவ்வொரு ஊராட்சியிலும் எவ்வளவு நிதி இருக்கிறது. எவ்வளவு வருவாய் பெறப்பட்டது, கடந்த காலங்களின் வரவு செலவு அறிக்கை விவரங்களையும் திட்ட பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர். ஊராட்சிகளில்…

Read More