K. V

கோவையில் ஜமாபந்தி; 2 நாளில் 5517 மனுக்கள் குவிந்தது…

கோவை மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 16ம் தேதி துவங்கியது. மதுக்கரை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் முகாம் நடந்து வருகிறது. வரும் 19ம் தேதி வரை ஜமாபந்தி நடத்தப்படவுள்ளது. மதுக்கரையில் 18 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கோவை வடக்கு தாலுகாவில் வரும் 25ம் தேதி வரையிலும் முகாம் நடக்கவுள்ளது.. வார விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில்…

Read More

கோவையில் செம்மண் முறைகேடு; ரூ50 கோடி வசூல் தாமதம்…

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, வெள்ளிமலை பட்டினம், போளுவாம்பட்டி, தென்கரை, சென்னனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுமதி இன்றி செம்மண் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக வருவாய்துறை மற்றும் கனிமவளத்துறையினர் சோதனை நடத்தினர். ட்ரோன் சர்வே செய்யப்பட்டது. இதில் 280 குழிகளில் 3.5 மீட்டர் ஆழம் வரை செம்மண் முறைகேடாக தோண்டி எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. சட்ட விரோத செங்கல் சூளைகளுக்காக இந்த செம்மண் லோடு கடத்தப்பட்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரத்துடன்…

Read More

கோவை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு…

கோவை மாவட்டத்தில் பவுண்டரி, ஆட்டோ மொபைல்ஸ், கிரைண்டர் உள்பட பல்வேறு வகையான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் மாவட்ட அளவில் தொழில் நிறுவனங்களுக்கான திறன்மிகு தொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐடிஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் தேவை அதிகரித்து வருகிறது. சிஎன்சி ஆபரேட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பணி செய்பவர்கள், வெல்டர், பிட்டர்,…

Read More

தமிழக முதல்வர் விஜய்க்கு செவிட்டு மெசின் பார்சல்….

கோவை, ஜூன் 18: கோவை கிணத்துக்கடவு சொலவம்பாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெரியார் மணி (50). இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தபால் அலுவலகத்தில் காது கேட்கும் கருவியை தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பார்சலில் அனுப்பினார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் தினமும் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. முதல்வர் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த காலங்களில் சத்தமாக குரல் கொடுத்து வந்தார். இப்போது அவரது ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்ட…

Read More

நீட் பயத்தில் மாணவி தற்கொலை…

கோவை குனியமுத்தூர் பாரூக் நகரை சேர்ந்தவர் செந்தில் பிரபு (47). கோவை சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளராகவும், மா.கம்யூனிஸ்ட் மேற்கு நகர் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் மகள் அனுகீர்த்தனா (19). எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்விற்காக பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். அனுகீர்த்தனா 2 முறை நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த முறை எழுதிய நீட் தேர்வும், வினாத்தாள் கசிவு காரணமாக…

Read More

ஸ்டாலின் போட்டோ மாட்டக்கூடாதுங்க… கோவை மாநகராட்சியில் மல்லுக்கட்டு…

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மூன்று மாதங்கள் கடந்து இன்று காலை டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு மேயர் ரங்கநாயகி முன்னாள் முதல்வர் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் அழகு…

Read More

சிங்கப்பெண் சிறப்பு படை சீக்கிரம் வருமா… கல்லூரி ஏரியாக்களில் கஞ்சா குரூப் ரவுண்ட்ஸ்

கோவை நகரில் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு பகுதியில் அதிகளவு கல்லூரிகள் இருக்கிறது. இந்த கல்லூரிகளின் வேலை நேரம் மாலை சுமார் 4 மணிக்கு முடிவடைகிறது. அந்த நேரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் பஸ் ஸ்டாப், பொது இடங்களுக்கு வந்து செல்கிறார்கள். அப்போது கஞ்சா, சிந்தடிக் டிரக் போதை கும்பல் ஜாலியாக வலம் வருவதாக புகார் எழுந்துள்ளது. படிப்பை முடித்த -சீனியர்கள் சிலரும் கல்லூரி அருகே ரோட்டில் மாணவிகளை நோட்டம் விட்டு வலம் வந்து…

Read More

கோவையில் கைதியை தப்ப வைத்த போலீஸ்காரர் கைது: 3 போலீசார் சஸ்பெண்ட்

பிம்முடு அஜித் குமார்.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (27). மோசடி நபர் ஆன இவர் தமிழகம் ஆந்திர மாநிலங்களில் கார் விற்பனை மற்றும் பல்வேறு தொழில் தொடர்பாக மோசடி செய்து ஏமாற்றியது தொடர்பாக இவர் மீது வழக்கு இருக்கிறது. திருப்பூரில் நடந்த மோதல் விவகாரத்தில் பிம்முடு அஜித் குமார் கைது செய்யப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவரை அங்கே கைதிகள் வார்டில் பணியில் இருந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த போலீஸ்காரர்…

Read More

பத்திரம் பதிவு செய்யாமல் நீண்ட காலம் பெண்டிங் இருந்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை…

தமிழக பத்திரப்பதிவு துறை ஐஜி தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு டிஐஜி மற்றும் மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள அதிரடி சுற்றறிக்கை; பதிவுத்துறை பணியாளர்கள் மீது பெறப்படும் புகார்/கையூட்டுப் புகார் மனுக்களை வகை (1), வகை (II), வகை (III) & வகை (TV) வகைப்படுத்தி, புகார் மனுவின் வகைக்கு ஏற்றாற்போல் புகார் மனுவின் மீது (நேரடியாக) இரகசிய விசாரணை மேற்கொள்ளப்படும். புகார் மனு குறித்து ஆதார ஆவணங்கள் மற்றும் வாக்குமூல நகல்களுடன் முழுவிபர விசாரணை பதிவுத்துறைத்தலைவருக்கு…

Read More

யானை, சிறுத்தை தாண்டி சிறுவாணி அணைக்கு போக சிக்கல்…!

கோவை சிறுவாணிக்கு கோவை குற்றாலம் வனப்பகுதியிலிருந்து, சாடிவயல், சிங்கப்பதி, வெள்ளப்பதி, சுத்திகரிப்பு நிலையம், மயிலோன் பங்களா வழியாக 15 கி.மீ தூரம் செல்லவேண்டும். 12 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதி வழியாக சென்றால் சிறுவாணிக்கு செல்ல முடியும். கடந்த 10 ஆண்டாக வனப்பகுதி ரோட்டில் மண் சரிவினால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அபாய வளைவுகள், பள்ளங்கள் நிறைந்த வனப்பகுதி ரோட்டில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த…

Read More