K. V

என் புருஷனை கொலை செஞ்சவங்கள பிடிங்க…மனைவி போலீசில் புகார்

கோவை காருண்யா சாடிவயல் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (30) என்பவர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், “என் கணவர் ராஜ துரை (35) நாங்கள் கூலி வேலை செய்து வந்தோம். எங்களுக்கு 7 பெண் குழந்தைகள் உள்ளனர் கடந்த மாதம் 6ம் தேதி இரவு என் கணவர் ஆலாந்துறை டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அங்கே ராமர், லட்சுமணர் பணம் கேட்டு தாக்கி கள்ளி விட்டதில் என் கணவர் காயம்…

Read More

யானை காரிடாரில் டிஜிபிஎஸ் சர்வே..!

கோவை மாவட்டத்தில் 693 சதுர கி.மீ பரப்பில் வனம் அமைந்திருக்கிறது. இதில் யானைகளின் இடப்பெயர்ச்சி அதிகமாக இருக்கிறது. கேரள மாநிலத்திலிருந்து கோவை வனத்திற்கு யானைகள் அதிகமாக வந்து செல்கின்றன. வன எல்லையில் ஆனயிக தலங்கள் சுற்றுலா மையங்கள், கல்வி, பொழுது போக்கு நிறுவனங்கள் இருக்கிறது. அதிக கட்டடங்களின் யானைகளின் வலசை பாதை (காரிடார்) முடங்கி போய் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் சர்வே பிரிவின்…

Read More

கோவை வெஸ்டன் பைபாஸ் 2 பேக்கேஜில் மாற்றம்…

கோவை மேற்கு பைபாஸ் ரோடு பணி மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் 32.40 கிமீ தூரத்திற்கு 3 கட்டமாக 4 வழிப்பாதையாக நடக்கிறது. முதல் கட்டமாக 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் இந்த பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. மைல்கல் முதல் மாதம்பட்டி வரை இந்த பணிகள் நடக்கிறது. ஜனவரி மாதத்தில் இந்த ரோடு பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை…

Read More

கோவையில் ரோடு மறியல் செய்த விவசாயிகள் கைது

கோவை தென்னம்பாளையம் பகுதியில் உருக்கு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அண்ணா சிலை முன்பு இன்று மறியல் போராட்டம் நடத்த முயன்ற போது போலீசார் 100 கற்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.

Read More

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி

கோவை கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணி நடந்தது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read More

கோவை வெஸ்டர்ன் பைபாஸில் சர்வீஸ் ரோடு ,பாலம்

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து மாதம்பட்டி வரை 11.8 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. மைல் கல் பகுதியில் 30 கோடி ரூபாய் செலவில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இதன் அருகே தனியார் நிறுவனத்தின் கல்குவாரி பகுதியில் தரை மட்ட பாலம் மற்றும் சர்வீஸ் ரோடு உருவாக்கப்பட்டு வருகிறது. பெரிய பாறைகளை உடைத்து ரோடு போடும் பணி நடக்கிறது.

Read More

கோவை விமானத்தில் கண்ணாடி உடைத்தவருக்கு அபராதம்

கோவை விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து விமானம் இன்று காலை வந்தது. விமானத்திலிருந்து இறங்கி பயணிகள் வெளியே வந்து கொண்டு இருந்தனர். அப்போது பயணி ஒருவர் அவசரமாக வந்தபோது கண்ணாடி கதவை உடைத்து விட்டதாக தெரிகிறது. இது குறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாகுல் அமீது என்பது தெரிய வந்தது. அவர் அவசரமாக வெளியில் செல்ல முயன்ற போது எதிர்பாராத…

Read More

வெடிகுண்டு தேடிப் போனா சைனா பட்டாசு..

கோவை சாய்பாபா காலனி ராஜா அண்ணாமலை தெருவில் ஒரு ஓட்டல் முன்பு வெடிகுண்டு இருப்பதாக புகார் இருந்தது. சாய்பாபா காலனி போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் இன்று காலை அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பிளாஸ்டிக் கவரில் வெடிகுண்டு போல் ஒரு பொருள் கிடந்தது. அதை பரிசோதனை செய்து பார்த்தபோது அது சைனா பட்டாசு என தெரிவிக்கின்றது. யாரோ வெடிக்காத பட்டாசை தூக்கி வீசி சென்றிருந்தனர். இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வெடிகுண்டு என…

Read More

ஸ்கூட்டர் மானியம் கிடைக்கல..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுண்டக்கா முத்தூர் பகுதியை சேர்ந்த டீ வியாபாரி கிருஷ்ணசாமி என்பவர் தன் மனைவி பெயரில் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்க அரசு துறையில் அனுமதி வழங்கப்பட்டது. ஸ்கூட்டர் வாங்கிய பின்னர் அனுமதி உத்தரவு இருந்தும் 25 ஆயிரம் ரூபாய் மானிய தொகை வழங்கப்படவில்லை. அரசாங்கம் மானியத் தொகை தரும் என சொந்தக் காசில் ஸ்கூட்டர் வாங்கி விட்டோம். இப்போது மானியம் தர மறுக்கிறார்கள். நான்கு ஆண்டாக அலைந்து ஏமாந்து போய் விட்டோம்….

Read More