வாக்கு சாவடி மையங்களில் இரு நாட்கள் உதவி மையங்கள்..
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தூய்மையான வாக்காளர் பட்டியலினை தயார் செய்திடும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தமுறை 2026-ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 04, 2025 அன்று தொடங்கிய கணக்கெடுப்புப் பணி எதிர்வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கணக்கீட்டுப் படிவத்தினை அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களுக்குள்ள…
தாத்தா பாட்டிக்கு லெட்டர் போடுங்க,கோவை விழாவுக்கு ஏற்பாடுங்க…
“கோவை விழா” 18 வது எடிசன் கோயம்புத்தூரில் 14 நவம்பர் 2025 முதல் 24 நவம்பர் 2025 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கோவை விழா” குழுவுடன் இணைந்து கோவை அஞ்சல் கோட்டம் “பேரன்பு” என்ற நிகழ்வில் “தாத்தா பாட்டிக்கு கடிதம் எழுதும்” செயல்பாட்டினை இந்த வருடமும் செயல்படுத்துகிறது. -14.11.2025 அன்று “கோவை விழா” “பேரன்பு” நிகழ்ச்சியின் தொடக்கத்தினை முன்னிட்டு SSVM World School, சிங்காநல்லூரில், 2000 பள்ளிக் குழந்தைகள் “தாத்தா-பாட்டிக்கு கடிதம்…
காத்து கருப்பு அண்டாம காக்கும் சாமீ…..
குத்தம் செஞ்ச எங்க கருப்பு சும்மா விடாது. கையும் காலும் சுகமா இருக்க கருப்பு துணை நிற்கும் என கிராம மக்கள் நம்புகிறார்கள். கொங்கு மண்டல மாவட்டங்களில் கருப்பண்ணசாமி. கருப்பராயன், எல்லை கருப்பு சூல கருப்பு என கருப்புசாமிக்கு பல பெயர்கள் உண்டு. தமிழகத்தின் காவல் தெய்வமாக வணங்கப்படும் கருப்புசாமிக்கு கிராம கோயில்களில் முக்கிய இடம் உண்டு. பெரும்பாலான கோயில்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. கருப்பு சாமிக்கு நேர்த்தி கடன் செய்து பூஜிப்பது காலம் காலமாக…
மனைவியை கொலை செஞ்சா செங்கல் சூளை தரேன்
கோவை மாவட்டம் தடாகம் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பன்னிமடை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் 51 வயதான கவி சரவணக்குமார் . இவர் மனைவி மகேஷ்வரி . கடந்த 15 வருடங்களாக கார் ஓட்டுநராக இவர்களிடம் பணிபுரிந்து வருபவர் சுரேஷ்-49 இவர் 28.10.25 அன்று 12.00 மணிக்கு கோவை மாநகரம் வடவள்ளி காவல் நிலையத்தில் மகேஸ்வரியை அவரது வீட்டில் வைத்து கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக கூறி மகேஸ்வரியின் கணவர் கவிசரவணன் என்பவருடன் வடவள்ளி…
