படிக்கணுமா குடிக்கணுமா..!கோவை புளியகுளத்தில் பரபரப்பு போஸ்டர்..

கோவை புலியகுளம் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு மதுபான கடைகள் குறிப்பாக எப் எல் 2 உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி கல்லூரிகள் உள்ள பகுதிகளில் மதுபான கடைகள் அதிகரிக்க என்ன காரணம் மாணவர்கள் படிக்க வேண்டுமா குடிக்க வேண்டுமாஇது புலிய குளமா சாராய குளமாஇதுதான் திராவிட மாடல் என்ற வாசகங்களுடன் நாம் தமிழர் கட்சியினர் புளியகுளம் மற்றும் அதன் சுற்றிய பகுதிகளில்…

Read More

கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் மாயமான 2 சிறுமிகள் மீட்பு

கோவை, உக்கடம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு 2 சிறுமிகள் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, கோவை மாநகரில் ரோந்து சென்று பெண்களை கண்காணிக்கும் பிங்க் பெட்ரோல் வாகனத்தில் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் 2 சிறுமிகளையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கேரளா மாநிலம் வாளையார் அருகே உள்ள கஞ்சிக்கோடு பனங்காடு பகுதியில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், விசாரணையில் அவர்கள் 17, 14 வயதுடைய அக்கா, தங்கை என்பதும்,…

Read More

மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை சாதிய விவகாரம்; கோவை கலெக்டருக்கு நோட்டீஸ்..!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை 1 பிரிவில் சசிராஜ் (42) என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இதே கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் பிரகாஷ் குமார் (44) பணியாற்றினார். இவர் தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தை சேர்ந்தவர். அலுவலகத்தில் சசிராஜின் ஒழுங்கீன நடவடிக்கைக்காக பிரகாஷ் குமார் அவருக்கு மெமோ கொடுத்துள்ளார். இந்நிலையில், பிரகாஷ் குமார் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் கோவை உக்கடம் அரசு பஸ் போக்குவரத்து கழக அலுவலக கிளை மேலாளராக இடமாற்றம்…

Read More

கோவையில் திமுக பாஜக ஒட்டிய ‘முட்டை போஸ்டரால்’ பரபரப்பு..!

கோவை நகரில் கணபதி, ஒண்டிப்புதூர், எஸ் ஐ எஸ் எஸ் காலனி சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதி முட்டை என படம் போட்டு பல இடங்களில் போஸ்டர் ஒட்டி வைத்தனர். இதை பார்த்த பாரதிய ஜனதா கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். திமுகவினருக்கு போட்டியாக இவர்களும் கோவையில் திமுக முட்டை, தீய சக்தி திமுகவை துடைத்தெறிவோம்…

Read More

விஜய் மீது எல்லோருக்கும் பயம்; கோவையில் செங்கோட்டையன் பேட்டி..!

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை இன்று நிருபர்கள் சந்தித்து கேள்வி கேட்டனர். பாஜகவை டப்பா என்ஜின் என்ற நடிகர் விஜயிடம் என்ஜினே இல்லை என்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் செய்தது தொடர்பாக கேட்ட போது தவெகவை தமிழக மக்கள் தெளிவாக முடிவு செய்துள்ளார்கள். இரண்டு இயக்கங்கள் மட்டுமே இந்த நாட்டை ஆள வேண்டுமா, புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த தவெக…

Read More

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஓட்டு செயல் விளக்கம் முடக்கம்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3524 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சூலூர் ,மேட்டுப்பாளையம் ,தொண்டாமுத்தூர் வால்பாறை சிங்காநல்லூர், கோவை வடக்கு ,தெற்கு உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் ஓட்டு போடுவது தொடர்பான செயல் விளக்கம் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதன்படி மாவட்ட வாரியாக ஆர்டீஓ அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டு பதிவு மெஷின், கட்டுப்பாட்டு மெசின் , சின்னம் காட்டும் மெஷின் போன்றவற்றை வைத்து பொதுமக்கள் ஓட்டு போடுவதற்கு செயல்…

Read More

கோவை மாவட்டத்தில் சென்சிடிவ் ஒட்டு சாவடிகள் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடிகள் இருந்தது. சமீபத்தில் நடந்த அனைத்து கட்சி, தேர்தல் பிரிவினர் ஆலோசனை கூட்டத்தில் கடந்த கால வாக்காளர்கள் அடிப்படையில் அதிக ஓட்டு சாவடிகள் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 3117 ஓட்டு சாவடிகள் இருந்தது. தற்போது 446 ஓட்டு சாவடிகள் அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்பட்டது. இறந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள் என 6.50 லட்சம் பேர் பட்டியலில்…

Read More

கோவை மாவட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பதில் பின் தங்கும் தவெக கட்சி..

கோவை மாவட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினர் அரசியல் பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகத்தினர் எந்த அரசியல் வேலையும் செய்யாமல் ஒதுக்கி விட்டார்கள். ஜனநாயகன் படம் வரும் என கட்சி தொண்டர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். படம் ரிலீசாகாத அதிருப்தியில் கட்சியினர் சுணக்கி போய் விட்டார்களாம். படம் வந்திருந்தால் விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் எழுச்சியுடன் வேலை செய்திருப்பார்கள். இப்போது ரொம்ப டல்லாக இருக்கிறார்களாம். என்ன செய்வது என தெரியாமல் பொறுப்பில்…

Read More

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் நாளை முதல் ஏ ஐ கேமரா..!

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1671 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை . மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சிலர் வாகனங்களில்…

Read More

கோவையில் உயிருக்கு போராடிய கர்ப்பிணி யானை சாவு..!

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட குப்பனூர் பகுதியில் கடந்த 25ம் தேதியன்று ஒரு விவசாய நிலத்தில் இருந்த 50 வயதான ஒரு பெண் யானை சேற்றில் சிக்கி தவித்தது. இது குறித்து தகவல் அறிந்த சென்ற வனத்துறையினர் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் கிரேன் மூலம் காட்டு யானையை சேற்றில் இருந்து மீட்டனர். பின்னர், அந்த யானைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் அந்த யானையின் உடல் நிலை தேறியதை தொடர்ந்து கடந்த 26ம் தேதி…

Read More