கோவை மாவட்டத்தில் 5 ஆண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கு 21.43 கோடி ரூபாய்க்கு உதவி..!

கோவை மாவட்ட ற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மூன்று சக்கர சைக்கிள்கள், குழந்தைகளுக்கான நடைவண்டி, மடக்கு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் தையல் எந்திரங்கள், காதொலிக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 21.43 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து கலெக்டர் பவன்குமார் கூறுகையில்,” கோவை…

Read More

கோவை மாவட்டத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழு கூட்டம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே தனியார் திருமண மண்டபத்தில் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, ” ஒரு நாளில் மட்டும் பல ஆயிரக்கணக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு அரசியல் கட்சித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக விஜய் இருக்கிறார். யாருக்கும் இடையூறு இருக்கக்கூடாது என்பதற்காக, ஆன்லைன் மூலமாக…

Read More

கோவை மாவட்டத்தில் எஸ் ஐ ஆர் பணிகள் நிலவரம்; தேர்தல் பார்வையாளர் ஆய்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தேர்தல் பார்வையாளர் ராகுல் நாத் இன்று வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் (எஸ்ஐஆர்)தொடர்பாக ஆய்வு நடத்தினார். கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்கள், நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் குறிப்பாக இறந்து போனவர்கள், ஆப்சென்ட் ஆனவர்கள் முகவரியில் இல்லாதவர்கள் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரித்தார் . மேலும் விடுபட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அடுத்து வெளியாக உள்ள இறுதி வாக்காளர் பட்டியல் பணிகள்…

Read More

கோவையில் வரும் 8ம் தேதி குரூப் 2 தேர்வு..!

கோவை பெரிய கடை வீதிக செயின்ட் மைக்கேல்ஸ் மேல்நிலைபள்ளியில் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கு (தொகுதி-|| மற்றும் || A பணிகள்) தேர்வு நடத்தப்படும். வரும் 8ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடத்தப்படும். ஓஎம்ஆர் வகையில் கேள்விகள் கேட்கப்படும். 331 தேர்வர் பாடத் தாள் II பொதுப் படிப்புகள் பொது நுண்ணறிவு பகுத்தறிவு தேர்வு எழுதவுள்ளனர். அன்றைய தினம் 348 தேர்வர் மதியம் 2.30 மணி முதல்…

Read More

போதைப் பொருள் கடத்திய 4 பேருக்கு 12 ஆண்டு சிறை; கோவை கோர்ட் தீர்ப்பு..!

பிரதான குற்றவாளி முனீர்.. நீலகிரி மாவட்டம் மசினகுடி போலீசார் கடந்த 26-10-2023ம் தேதி கக்கநல்லா சோதனை சாவடியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் 4 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் பெயர் முகவரி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனையடுத்து போலீசார் கார் மற்றும் 4 பேரையும் சோதனை செய்தனர். அதில், மலப்புரத்தை சேர்ந்த முனீர் (34) என்பவரிடம்…

Read More

விரைவில் தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு; கோவை தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் சிஇஓ அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை..!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக ஏற்பாடுகளை முழு அளவில் செய்து முடித்திருக்க வேண்டும். ஊழியர்கள் பட்டியலை தயார் செய்து இறுதி செய்ய வேண்டும். பட்டியல் மிகச் சரியாக இருக்க வேண்டும். யாருக்கும் தேவையின்றி பணி சலுகை வழங்கக் கூடாது. தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்‌….

Read More

கோவையில் வெளிநாட்டு பணம் என நூதன ஆசை காட்டி ரூ 2.50 கோடி மோசடி; 3 பேர் கைது

காஞ்சீபுரம் கோவூர் பகுதியை சேர்ந்தவர் ரவி ( 56). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த முத்து, அவரது மகன் தீபக் (27) ஆகியோருடன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்தோம். இந்த நிலையில் முத்து கடந்த 2022-ம் ஆண்டு இறந்து விட்டார். இதனிடையே தீபக் என்னை அணுகினார். தனது அப்பாவிற்கு…

Read More

தமிழக வனத்தில் 13 ஆண்டில் 41195 தீ விபத்து..! WWF India அதிர்ச்சி தகவல்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் WWF India என்ற இயற்கைக்காக உலகளாவிய நிதியம் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் உதவி என்ற காட்டுத்தீ மேலாண்மை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. கோவை வனக்கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, திருப்பூர் வனக்கோட்டத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறைகள், வனத்துறையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள்…

Read More

கோவை அரசு மருத்துவமனை முன் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு..!

திருப்பூர் வஞ்சிபாளையம் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (27 ). கிரேன் தொழிலாளி . இவர் கோவை அரசு மருத்துவமனையின் முன்பு இன்று மாலை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் . அப்போது அவர் கூறுகையில்,” எனது தம்பி கதிரேசன் (25 ) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று எங்களது வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் வாங்க அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருப்பூர் 63 வேலம்பாளையம்…

Read More