கோவையில் ஓடும் பஸ்ஸில் கதவு வழியாக தவறி விழுந்த மூதாட்டி சாவு
கோவை புதூரில் இருந்து இன்று காலை தனியார் டவுன் பஸ் காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த கோமதி (62) என்பவர் பயணம் செய்தார். அவர் தனது பஸ் ஸ்டாப் வந்ததும் எழுந்து செல்ல முயன்றார் . ஆனால் பஸ் வேகமாக சென்றதால் கம்பியை பிடிக்க அவர் தடுமாறினார் இந்த நிலையில் அவர் பஸ் கதவு வழியாக தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த காயமடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்….
