வெளியூர் காரர்கள் இருக்காங்களா… கோவையில் அதிரடி சோதனை
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட நபர்களை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் முடிந்தது. இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதி, லாட்ஜ், சர்வீஸ் அபார்ட்மெண்ட் மற்றும் பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். |திருமண மண்டபம், பார்ட்டி ஹால் மற்றும் பொது இடங்களில் கட்சியினர் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள்…
