மனுக்களுக்கு மலர்வளையம் வைத்ததால் பரபரப்பு..
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் போராட்டம் நடத்தப்பட்டது .இதில் கோவை வடக்கு தெற்கு மதுக்கரை சூலூர் மற்றும் பேரூர் தாலுகா எல்லைப் பகுதியில் வசித்து வரும் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச மனை பட்டா கேட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மனு கொடுத்து வரப்பட்டது .
ஆனால் இந்த மனுக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. தீர்வு கிடைக்காத மனுக்களுக்காக இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் வளையம் வைக்கிறோம் எனக்கூறி மலர் வளையம் வைத்து போராடினர் .இதை தொடர்ந்து போலீசார் மலர் வளையத்தை பறித்தனர் .இதனால் அந்த பகுதியில் பரபரப்பு
