கையிலே கலை வண்ணம்.. எல்லாம் மாணவர்கள் எண்ணம்..!
கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் கையால் தயாரித்த கைவினை பொருட்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் எளிதில் மக்கும் பொருட்கள் மற்றும் சில வீட்டு உபயோக பொருட்கள் பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட பொருட்களை வைத்து அழகான கலை நயமிக்க காட்சி பொருள்களை உருவாக்கியுள்ளனர். 500க்கும் மேற்பட்ட கைவினைப் பொருள்கள் அலங்காரத்துடன் வைக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்கள் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
