9.7 கோடி ரூபாய் தங்க கட்டிகள் கோவை பஸ்ஸில் சிக்கியது .. !

பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த பஸ்ஸில் இன்று கோவை கந்தே கவுண்டன் சாவடி போலீசார் சோதனை நடத்தினர். இதில் வாலிபர் ஒருவரிடம் 11 கட்டிகளில் 6,140 கிராம் எடையில் 24 கேரட் தங்கம் இருந்தது.

அவரிடம் போலீசார் விசாரித்த போது எர்ணாகுளம் பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் ரகுமான் 42 என்பவரிடம் வேலை செய்வதாகவும் அவர் கொடுத்து விட்ட தங்க கட்டிகள் இது என அவர் தெரிவித்தார்.

இதனை உக்கடம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரிடம் ஒப்படைக்க கொண்டு செல்வதாக கூறினார். முறையான கணக்கு ஆதாரம் இல்லாமல் கொண்டு வந்ததால் இதனை பறிமுதல் செய்த போலீசார் வருமானவரித்துறையுடன் ஒப்படைத்தனர். இந்த தங்க கட்டி ஹவாலா மோசடி தொடர்பில் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *