கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகுந்த பாம்பு..!

பாம்பு படுத்திருந்த பிரதான கேட் பகுதி..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பாம்பு சுற்றியது. இது தொடர்பாக தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கே சென்று பார்த்த போது பிரதான கேட் அருகே சாரை பாம்பு படுத்திருந்தது.

அதை பிடித்து எடுத்து சென்றனர். கடந்த சில மாதம் முன் கலெக்டர் அலுவலக கார் நிறுத்துமிடத்தில் நாக பாம்பு கண்டறியப்பட்டது. பாம்பு நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கலெக்டர் அலுவலகத்தின் பழைய கருவூல அலுவலகம், அதை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பை குவிந்து காணப்படுகிறது.

இங்கே இரவு நேரத்தில் பாம்புகள் அதிகமாக சுற்றுவதாக தெரிகிறது. ரயில் பாதையில் இருந்தும் பாம்புகள் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வருவதாக தெரிகிறது. எனவே காம்பவுண்ட் சுவர் அமைத்து பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *