கோவையில் கடந்த மாதம் 28 பேர் விபத்தில் சாவு
கோவை நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விபத்துகளில் 28 பேர் உயிரிழந்தனர்.
இதில் எட்டு பேர் லாரி மற்றும் பஸ்ஸில் மோதி இறந்துள்ளனர் . ஆறு பேர் கனரக வாகனங்களில் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். ரோட்டை கடக்க முயன்றவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிவேகமாக செல்பவர்கள் விபத்தில் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
விபத்து களை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. கோவை நகரில் பழுதான ரோடுகள் தோண்டப்பட்ட குழிகள் மேம்பாலம் மற்றும் சாலை சந்திப்புகளில் ஏற்படும் நெருக்கடிகள் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்க நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
