சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி வார்த்தைகள் அழிப்பு

கோவை சிங்காநல்லூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் பொதுமக்கள், பயணிகள் தெரிந்து கொள்ள வசதியாக ரயில் நிலையம் மற்றும் சிங்காநல்லூர் என்ற பெயர் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி எழுத்துக்களில் எழுதி வைக்கப்பட்டிருந்தது.


இதில் இந்தி வார்த்தைகள் அனைத்தும் கருப்பு மையால் சிலர் அழித்து விட்டார்கள். ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள அனைத்து இடங்களிலும் இந்தி வார்த்தைகள் கருப்பு மையால் அழிக்கப்பட்டு இருந்தது .

இது தொடர்பாக ரயில்வே போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் கருப்பு மையால் அழித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தி எதிர்ப்பு போராட்ட காலத்தில் சிங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் ரயில் மறியல் மற்றும் இந்தி வார்த்தைகள் அழிப்பு போராட்டங்கள் நடந்தது.

இந்தப் போராட்டங்கள் வரலாற்று சுவடுகளாக இன்னும் இருக்கிறது. அந்த காலப் போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் திடீரென தற்போது இந்தி வார்த்தைகள் அழிப்பு நடத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *