வாலாங்குளம் ஆகாயத்தாமரை பூங்கா

உக்கடம் வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்து பசுந்தோட்டம் பூங்கா போல் காட்சி தருகிறது. துர்நாற்றம் வீசும் இந்த குளத்தில் கழிவுநீர் விடாமல் இருந்தால் மட்டுமே இந்த ஆகாயத்தாமரை படர்வதை தடுக்க முடியும். கோவை மாநகராட்சி பல லட்ச ரூபாயை வாரி இறைத்து சுத்திகரிப்பு நிலையம் என பல திட்டங்களை போட்டும் அழிக்க முடியாத சக்தியாக ஆகாயத்தாமரைகள் குளங்களை மூடி படர்ந்துள்ளன.
