இரு கார், லாரி மோதல் ki
கோவை சரவணம்பட்டி பகுதியில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் லாரி டிரைவருக்கு நெஞ்சு வலி ஏற்பட அவர் நிதானம் இழக்க ஆரம்பித்தார். அவரால் வாகனம் சரியாக ஓட்ட முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த இரண்டு கார்கள் லாரிக்கு இடையில் சிக்கிக்கொண்டது. அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன. இருந்த போதிலும் சுதாரித்த லாரி டிரைவர் பிரேக் பிடித்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
