கோவையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அதிரடி டெஸ்ட்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதிகளில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஓட்டு பதிவு நடக்கவுள்ளது. இதற்கு துணை கலெக்டர் அந்தஸ்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ஆர்ஓ), தாசில்தார் அந்தஸ்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ஏஆர்ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தொகுதிக்கு ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட அளவில் 30 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் இவர்களிடம் தான் வேட்பாளர்கள் வேட்பு மனு…

Read More

கோவையில் தேர்தல் சோதனை: 10 நாளில் 4.51 கோடி ரூபாய் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 31.97 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை தெற்கு தொகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்த போது பில் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 16 டேபிள் பேன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்…

Read More

ஓட்டு மெஷின்களை பத்திரமா கொண்டு போகணும்.. கோவையில் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவு

கோவை ஆர்.எஸ் புரம் மாநகராட்சி கலை அரங்கத்தில் கோவை மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பவன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் 366 மண்டல தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். பயிற்சியின் போது அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு மண்டல அலுவலருக்கும் 10 முதல் 15 ஓட்டு சாவடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது….

Read More

கோவை மாவட்டத்தில் ஓட்டு சாவடிகளுக்கு வீல் சேர் ரெடி. ..

கோவை மாவட்டத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம்.கவுண்டம்பாளையம்,சூலூர் உள்பட மொத்தம் 10 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளது. இதில் 3,563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. = மாவட்டத்தில் மொத்தம் 1,062 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் விருப்பம் இருந்தால் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்காளிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தப்படியே தபால் ஓட்டு போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு நேரில் வரும் முதியவர்கள், வயதானவர்கள் நடக்க முடியாதவர்கள்,…

Read More

கோவை மாவட்டத்தில் ‘ஆதிதிராவிடர் காலனி’ என ரசீது வழங்கிய அதிகாரிக்கு நோட்டீஸ்…!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் எல்லைக்குட்பட்ட வடவள்ளி ஊராட்சி ஆதிதிராவிடர் காலனி என்று குடிநீர் கட்டண ரசீது வழங்கியுள்ளது . வடவள்ளி செயல் அலுவலர் குடிநீர் கட்டணம் செலுத்திய பொதுமக்களுக்கு 23.03.2026 தேதியில் ரசீது வழங்கியுள்ளார். அதில் வேலப்பநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி என்று குறிப்பிட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் வரப்பெற்ற தகவலின் பேரில், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நல ஆணையம் தாமே முன் வந்து இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அரசாணை (நிலை)…

Read More

கோவையில் 20 கிலோ தங்க கட்டியை தடையின்றி அனுப்பிய தேர்தல் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அதனை சோதனை செய்து பார்த்தபோது தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் சந்தேகம் இருப்பதாக…

Read More

கோவையில் 5 பேரிடம் 72,000 ரூபாய் பறிமுதல்… தப்பு கணக்கு போட்டதாக தேர்தல் பிரிவில் புகார்..

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் நேற்று முதல் இன்று காலை 6 மணி வரை 37.46 லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 13 கிலோ போதை பொருட்கள் சிக்கியது. நிலையான கண்காணிப்பு படையினர் 18.65 லட்ச ரூபாய் பறக்கும் படையினர் 12.08 லட்ச ரூபாய் மதிப்பிலான தொகையை பறிமுதல் செய்துள்ளனர்….

Read More

கோவை ஜிசிடி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

கோவை, மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. வரும் 30ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடக்கவுள்ளது. இந்த நிலையில், மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தும் வகையில் ஓட்டு எண்ணிக்கை மையம் (கவுண்டிங் சென்டர்) தயார் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை நடத்த…

Read More

கோவையில் வாக்குச்சாவடி தயார் செய்யும் பணி தாமதம்…

கோவை மாவட்டத்தில் மேட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு, சூலூர், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்ட மன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் தற்போது 446 ஓட்டு சாவடிகள், 8 துணை ஓட்டு சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓட்டு சாவடிகளுக்கு மேப் உள்ளிட்ட தகவல் விவரங்களுடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஓட்டு சாவடிகளில் குடிநீர், கழிவறை, சாய்வு தளம், நிழற்கூரை உள்ளிட்ட வசதிகளை…

Read More

கோவை நகரில் சைபர் மோசடி கும்பலால் 2294 பேர் பாதிப்பு…

கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளின் கைவரிசையால் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்கள் பணத்தை இழக்காமல் இருக்க ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் சைபர் கிரைம் மோசடி தொடர்ந்து அதிகமாகி வருகிறது. கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.27 கோடியை மக்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை சைபர் மோசடி கும்பலிடம் 15…

Read More