ஸ்டாலின் போட்டோ மாட்டக்கூடாதுங்க… கோவை மாநகராட்சியில் மல்லுக்கட்டு…

தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மூன்று மாதங்கள் கடந்து இன்று காலை டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு மேயர் ரங்கநாயகி முன்னாள் முதல்வர் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் அழகு…

Read More

சிங்கப்பெண் சிறப்பு படை சீக்கிரம் வருமா… கல்லூரி ஏரியாக்களில் கஞ்சா குரூப் ரவுண்ட்ஸ்

கோவை நகரில் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு பகுதியில் அதிகளவு கல்லூரிகள் இருக்கிறது. இந்த கல்லூரிகளின் வேலை நேரம் மாலை சுமார் 4 மணிக்கு முடிவடைகிறது. அந்த நேரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் பஸ் ஸ்டாப், பொது இடங்களுக்கு வந்து செல்கிறார்கள். அப்போது கஞ்சா, சிந்தடிக் டிரக் போதை கும்பல் ஜாலியாக வலம் வருவதாக புகார் எழுந்துள்ளது. படிப்பை முடித்த -சீனியர்கள் சிலரும் கல்லூரி அருகே ரோட்டில் மாணவிகளை நோட்டம் விட்டு வலம் வந்து…

Read More

கோவையில் கைதியை தப்ப வைத்த போலீஸ்காரர் கைது: 3 போலீசார் சஸ்பெண்ட்

பிம்முடு அஜித் குமார்.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (27). மோசடி நபர் ஆன இவர் தமிழகம் ஆந்திர மாநிலங்களில் கார் விற்பனை மற்றும் பல்வேறு தொழில் தொடர்பாக மோசடி செய்து ஏமாற்றியது தொடர்பாக இவர் மீது வழக்கு இருக்கிறது. திருப்பூரில் நடந்த மோதல் விவகாரத்தில் பிம்முடு அஜித் குமார் கைது செய்யப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவரை அங்கே கைதிகள் வார்டில் பணியில் இருந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த போலீஸ்காரர்…

Read More

யானை, சிறுத்தை தாண்டி சிறுவாணி அணைக்கு போக சிக்கல்…!

கோவை சிறுவாணிக்கு கோவை குற்றாலம் வனப்பகுதியிலிருந்து, சாடிவயல், சிங்கப்பதி, வெள்ளப்பதி, சுத்திகரிப்பு நிலையம், மயிலோன் பங்களா வழியாக 15 கி.மீ தூரம் செல்லவேண்டும். 12 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதி வழியாக சென்றால் சிறுவாணிக்கு செல்ல முடியும். கடந்த 10 ஆண்டாக வனப்பகுதி ரோட்டில் மண் சரிவினால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அபாய வளைவுகள், பள்ளங்கள் நிறைந்த வனப்பகுதி ரோட்டில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த…

Read More

ரூ.1876 கோடியில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு 6 வழி பாதை… ஜனவரியில் பணி துவக்கம்

கோவையில் கடந்த 1999 ஆண்டில் மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு போடப்பட்டது. இது தான் கோவை கேரளாவுக்கான முக்கிய இணைப்பு பாதையாக இருக்கிறது. இந்த பைபாஸ் ரோட்டில் சுங்க கட்டணம் வசூல் 5 மையங்களில் இருந்தது. கடந்த சில மாதம் முன் சுங்கம் வசூல் நிறுத்தப்பட்டது. மதுக்கரையில் மட்டும் சுங்க கட்டணம் பெறப்பட்டுகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் (நகாய்) சார்பில் இந்த பைபாஸ் ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பைபாஸ் பேராட்டில் வாகன நெருக்கம் அதிகமாகி விட்டது….

Read More

கோவை சுந்தராபுரம் எப்எல்2 பாரில் ‘குடி பிரியர்களுக்கு’ கும்மாங்குத்து…!

சுந்தராபுரம் பார் பைல் படம்… கோவை மதுக்கரை ரோடு சுந்தராபுரத்தில் எப்எல்2 உரிமம் பெற்ற 11 டூ11 செயல்படும் மனமகிழ்மன்ற மதுபான கடை உள்ளது. இன்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு இந்த கடையில் குடிபிரியர்கள் மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் பார் ஊழியர்களிடம் மதுபானம் சரியில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக சிலர் பேசியுள்ளனர். பாரில் உணவு பொருட்கள் அதிக விலை விற்பனை செய்கிறார்கள். குவாட்டர், பீர் பாட்டிலுக்கு 30…

Read More

கோவை மாநகராட்சியில் கொசு மருந்து தெளிப்பு பணி பாதிப்பு…அபேட், பைரித்திரம் எங்கே போச்சு..

ரேஸ் கோர்ஸ் பூச்சியியல் பிரிவில் காட்சி பொருளாய் மருந்துகள்… கோவை மாநகராட்சியில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழை காலங்களை முன்னிட்டு டெங்கு, காலரா, டைபாய்டு தடுப்பு பணி என்ற பெயரில் நோய் கிருமி அழிப்பு பணிக்கான வேதிப்பொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர் . கடந்த ஆண்டில் மண்டல அளவில், 30 முதல் 40 லட்ச ரூபாய் அளவிற்கு கொசு அழிப்பு மருந்துகளான அப்ட்ே, பைரித்திரம் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள் வாங்கப்பட்டது.5 மண்டலங்களில் சுமார் 2 கோடி ரூபாய்…

Read More

டீன் ஏஜ் சிறார் பாதிப்பு அதிகரிப்பு…

கோவை மாவட்டத்தில் டீன் ஏஜ் சிறார் விவகாரம் கையாள்வதில் பல்வேறு அரசு துறையினர் ஒருங்கிணைப்பு இன்றி அலட்சியமாக செயல்படுவதாக இருப்பதாக தெரிகிறது. தவறு நடந்த பின்னர், பாதிப்பிற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கும் அவல நிலை இருப்பதால் டீன் ஏஜ் சிறார்கள் வெகுவாக பாதிப்பதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில், ஒரு ஆண்டில் பெண்கள், சிறார் தொடர்பாக 3761 புகார்கள் பெறப்பட்டது. இதில், சிறார் /6 பேர் திருமண வயதிற்கு முன் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. 18 முதல் 19…

Read More

கோவை அரசு பொருட்காட்சி துவக்கம்…

கோவை வஉசி மைதானத்தில் அரசு பொருட்காட்சி இன்று துவங்கியது. இதில் மாநகர போலீஸ், குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, வனத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 32 அரங்குகள், தனியார் சார்பில் சுமார் 40 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. வனத்துறை அரங்கில் 4 தந்தம், ஒரு காட்டெருமை தலை, 2 சிறுத்தை வடிவமைப்பு மற்றும் சில போட்டோக்கள் வைத்திருந்தனர். அதிகமான பொருட்கள் வைக்க கூடிய இந்த அரங்கம் குப்பை கூளமாக அசுத்தமாக காணப்பட்டது. காஸ் பாரஸ்ட் மியூசியம்,…

Read More

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பு…

பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பகுதி நேரம் மற்றும் முழுநேர பி.எச்.டி ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. ‘இந்த படிப்புகளில் சேர பல்கலை.யின் www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,000, எஸ்.சி, எஸ்.டி.., பிரிவினருக்கு ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் நகல்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன்…

Read More