கோவை மதுக்கரை பைபாஸ் ரோடு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.. !

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு கற்பகம் கல்லூரி அருகே சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இன்று மதியம் அந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக பரவிய நிலையில் அந்த வளாகம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும்…

Read More

கோவையில் குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய இரண்டு பேர் கைது

லஞ்சம் வாங்கி கைதான மோகன் கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெற லஞ்சம் அதிகளவு பெறப்பட்டு வருகிறது. மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் விண்ணப்பித்தால் அதற்கு அதிகாரிகள் , குடிநீர் வழங்கல் பிரிவினர் பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது . இன்று காந்தி பார்க் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பு…

Read More

கோவையில் எஸ் பி வேலுமணிக்கு எதிராக போஸ்டர்..!

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மீண்டும் அதிமுக ஆட்சி, மக்கள் எதிர்பார்ப்பு என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது ஆதரவாளர் மூலமாக இந்த போஸ்டர் ஒட்டி இருப்பதாக தெரிகிறது. இதற்கு போட்டியாக திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி நம்ம தான் ஜெயிக்கிறோம் நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம் என பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருக்கிறார். அதிமுக மற்றும் திமுக இடையே இந்த போட்டி போஸ்டர்கள் பரபரப்பு…

Read More

கோவையில் ஓடும் பஸ்ஸில் 5.20 லட்ச ரூபாய் திருட்டு..

கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி (40). இவர் அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டிருந்தார் ‌ . வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்பட்ட நிலையில் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சென்று மனைவியின் தங்க நகைகளை அடமானம் வைத்து 5.20 லட்ச ரூபாய் வாங்கினார் . அந்த பணத்துடன் சிவகங்கை மாவட்டத்திலிருந்து இரவு நேரத்தில் ஆம்னி பஸ்ஸில் வந்து கொண்டிருந்தார். பஸ்ஸின் மேல் பகுதியில் இருந்த ரேக்கில் பெட்டியை வைத்து கீழே…

Read More

கோவையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: 1.15 கோடி ரூபாய் பறித்த கும்பல்..!

கோவை நகர் பகுதியை சேர்ந்த 69 வயதான சமூக நலத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூதாட்டில் தனது வீட்டில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு வீடியோ கால் அழைப்பு வந்தது. அதில் மூதாட்டி பேசியபோது எதிர் முனையில் பேசிய நபர் மத்திய போலீஸ் சீருடையில் இருந்தார். அப்போது அவர் மும்பையில் இருந்து பேசுவதாகவும் விமானத்துறை மோசடி தொடர்பான வழக்கில் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது. நாங்கள் முதல் கட்ட விசாரணையை நடத்தி…

Read More

கோவை கோனியம்மன் தேர்: பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

கோவையின் காவல் தெய்வம் என்ற பெருமை பெற்ற கோனியம்மன் கோயில் தேர் திருவிழா இன்று நடந்தது. ராஜ வீதி தேர்நிலை திடலில் இருந்து அம்மன் திருத்தேரில் வீதி உலா நடந்தது. ராஜவீதி , ஒப்பண்ணக்கார வீதி, பெரிய கடை வீதி வழியாக தேர் கோயிலை வந்தடைந்து மீண்டும் தேர் நிலை திடல் சென்றடைந்தது. இதில் பல்லாயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோனியம்மன் கோயிலில் சுவாமியை தரிசிக்க கட்டுக்கடங்காமல் கூட்டம் குவிந்தது. பக்தர்களுக்கு அன்னதானம்…

Read More

கோவையில் 2353 கிலோ குட்கா அழிப்பு

கோவை கருமத்தம்பட்டி போலீஸ் உட்கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு குட்கா பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் தீ வைத்து இன்று அழித்தனர். 2353 கிலோ எடையிலான இந்த போதை பொருட்களின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே கடந்த மாதம் செட்டிபாளையம் பகுதியில் 2000 கிலோவுக்கும் அதிகமாக…

Read More

எப்போ தரப்போறாங்க… கோவையில் காத்திருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மொபட்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 150 மொபட் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டது. ஒரு மொபெட் 1.08 லட்ச ரூபாய் மதிப்பிலானது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் ஓடடும் வகையில் பக்கவாட்டில் இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. நடக்க முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த வாகனங்கள் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த வாகனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ” முதல்வர்…

Read More

கோவை அறிவு சார் நூலகத்தில் படித்த1.04 லட்சம் பேர்..!

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 05.01.2024 ம் தேதி அன்று கோயம்புத்தூர் உப்பிலிபாளையம், ஆடிஸ் தெருவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திறக்கப்பட்டது. மேலும், இந்த நூலகம் மற்றும் TNPSC, TNUSRB, TRB, TN-TET, SSC, GATE, UGC/NET/SET, UPSC, BANK, NDA, CAT, NEET, JEE, CLAT, RRB, IELTS, NCERT தேர்வுகளுக்கு பங்கேற்கும் வகையில் சுமார் 2080 மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், இந்த நூலகத்தில் கடந்த 2024 ஜனவரி முதல்…

Read More

கோவையில் வருவாய்த்துறை ஊழியர்கள் மறியல்: 500 பேர் கைது

தமிழக அரசு வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவருக்கும் பணி பாதுகாப்பு சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிக ஊழியர்கள் நியமனத்தை கைவிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாளர் நியமனம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இன்று கோவை கலெக்டர் அலுவலக வளாகத்ததின் முன்புவருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை…

Read More