கோவையில் வாகனம் மோதி சாய்ந்த சிக்னல்

கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு ராஜவீதி சந்திப்பு பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த சிக்னல் இன்னும் பயன்பாட்டுக்கு கூட கொண்டு வரப்படவில்லை . இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று சிக்னல் கம்பம் மீது மோதியது. இதில் அந்த கம்பம் சாய்ந்து கீழே விழும் நிலையில் இருக்கிறது. வாகனப் போக்குவரத்து தொடர்ந்து இருப்பதால் இந்த சிக்னல் கம்பத்தை போலீசாரால் அகற்ற முடியவில்லை . வின்சென்ட் ரோடு பகுதியில் இட…

Read More

Rain fall வானிலை அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம்… மழை எப்ப வருமோ…?!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் குறிப்பாக கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை துவங்கப் போகிறது என கடந்த இரண்டு வாரங்களாக தமிழக வேளாண் பல்கலைக்கழக வானிலை அறிவிப்பு மற்றும் மத்திய வானிலை துறை அறிவிப்புகள் தொடர்ந்த வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. ஒரு சில இடங்களில் இரண்டு முதல் மூன்று மில்லி மீட்டர்…

Read More

கோவை மாவட்டத்தில் கூடுதலாக 5 revenue village, pirka உருவாக்கம்…

கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 3 நகராட்சி, 33 பேரூராட்சிகள் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பரப்பளவு 4723 சதுர கி.மீ, மக்கள் தொகை 34,58,045 ஆக இருக்கிறது. மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் பணிகளை வேகமாக முடிக்கும் வகையில் வருவாய் கிராமங்கள், உள் வட்டங்களை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படி, கோவை மாவட்டத்தில் 5 வருவாய் குறு வட்டங்கள் (பிர்க்கா) மற்றும் 5 வருவாய் கிராமங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. கோவை வடக்கு வட்டம் கணபதி உள்வட்டத்தினை பிரித்து சங்கனூர்…

Read More

Covai Western bypass 2வது பேக்கேஜ் பணிகள் முடக்கம்…!

பைல் போட்டோ கோவை மாவட்டத்தில் Western bypass road இரண்டாம் கட்டத்திட்ட பணிகள் Tamil Nadu State highways authority வசம் ஒப்படைக்கப்பட்டு நிலுவையில் இருக்கிறது.. கோவை மாவட்டத்தில் மேற்கு பைபாஸ் ரோடு பணி மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் 3240 கிமீ தூரத்திற்கு 3 கட்டமாக 4 வழிப்பாதையாக பணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது….

Read More

கஞ்சா விற்பனை யா?… கோவையில் police checking… !

கோவை நகரில் கஞ்சா விற்பனை களை கட்டி வருகிறது. அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதி, ரயில் பாதை, கூட்செட் ரோடு, ரயில் நிலைய பிளாட்பாரம், அரசு மருத்துவமனை பிளாட்பாரம், அரசு கலைக்கல்லூரி ரோடு, சுங்கம், திருச்சி ரோடு புதிய மேம்பாலத்தின் கீழ் பகுதி, சுங்கம் பைபாஸ். ரோடு, வெரைட்டிஹால் ரோடு, ராம்நகர், காட்டூர், தேவாங்க பேட்டை ரோடு உள்பட 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடக்கிறது. பிளாட்பார வாசிகள், பிச்சைக்காரர்கள் போல் படுத்து ெகாண்டும்,…

Read More

பாட்டிலுக்கு 30 ரூவா extra வசூல்… Covai FL2 பார்களில் ஏக போக மோசடி…!

கோவை மாவட்டத்தில் எப்எல் 2, 3 உரிமம் பெற்ற தனியார் பார்கள் அதிகமாகியிருச்சு. கடந்த 3 வருஷத்தில் 80க்கும் மேற்பட்ட தனியார் பார்கள் கோவை மாவட்ட கலால் துறை லைசென்ஸ் வாரி வழங்கியிருக்குதாம். இதற்கு செந்தில் பாலாஜி குரூப் முக்கிய காரணமாக இருந்ததா கலால் துறை வட்டாரத்தில் பரவலாக பேச்சு இருக்குது. ஒவ்வொரு தனியார் பாரும் பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருக்காங்க. இந்த பார்களுக்கு அனுமதி வாங்குவதிலும் பல கோடி ரூபாய் கை மாறி இருக்குதாம்….

Read More

கோவை டாஸ்மாக் கடைகள் மூடல்: எப் எல் 2 பார்களில் குடிபிரியர்கள் கூட்டம்…!

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தது. இதில் சமீபத்தில் 69 மதுபான கடைகள் மூடப்பட்டது . பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள உள்ள இந்த கடைகள் மூடப்பட்டதாக தெரியவந்துள்ளது . இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கும் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. அரசு கூடுதலாக பத்து ரூபாய் வாங்க கூடாது என தெரிவித்துள்ளது . ஆனால் டாஸ்மாக் ஊழியர்கள் காலி மது பாட்டில்…

Read More

கோவை அம்மா உணவகத்தில் கலெக்டர் ஆய்வு…

கோவை மசக்காளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, சின்னியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மசக்காளிப்பாளையம் அம்மா உணவகம், மைலம்பட்டி நியாய விலைக்கடையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் இன்று ஆய்வு செய்தார். இதில் சூலூர் வட்டாட்சியர் திரு.செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கரி, கணேசமூர்த்தி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மசக்காளிப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை வசதிகள், மாணவர்களின் வருகைப்பதிவு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு…

Read More

கோவை மாவட்டத்தில் கல் குவாரிகளில் ட்ரோன் சர்வே…!

கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் (stone quarry) இருக்கிறது. இதில் 161 கல் குவாரிகள் இயக்க நிலையில் இருப்பதாகவும் சில கல் குவாரிகள் முறையாக இயக்கப்படாமல் லைசென்ஸ் புதுப்பிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இயங்கும் நிலையில் உள்ள சில குவாரிகளில் அதிகளவு கனிமங்கள் வெட்டி உரிய ராயல்டி தராமல் கடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் கல் குவாரிகள் தொடர்பாக விரைவில் டிரோன் சர்வே நடத்த கனிம வளத்துறை அமைச்சர்…

Read More

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் 2 பேருக்கு குண்டாஸ்…!

கோவை சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கார்த்திக் ( 33 ) என்பவர் கைது செய்யப்பட்டார் . இவர் மீது சிறார் பாலியல் பலாத்கார (போக்சோ) சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . இவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்து குளக்கரையில் சடலத்தை போட்டு சென்றதாக தெரியவந்தது . கோவை மட்டுமின்றி மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கார்த்திக் கைது…

Read More