கோவையில் முகமூடி அணிந்து நகை பறித்த மாணவன் மாணவி கைது…!

கோவை போத்தனூர் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர், கடந்த 30ம் தேதி வீட்டின் முன்பு தனது உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அங்குள்ள பல் சிகிச்சை கிளினிக் எப்போது திறப்பார்கள் என கேட்டு பேச்சுக் கொடுத்துள்ளார். மருத்துவரின் வீடு எங்குள்ளது என்றும் கேட்டுள்ளார். சரஸ்வதி, மருத்துவரின் வீடு உள்ள வழியை காட்டிய போது, திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச்…

Read More

தவெக ஆட்சி 5 ஆண்டு நடக்காது… எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது தமிழக முதல்வர் விஜய், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பதற்காக மேட்டூர் வந்திருக்கிறார்.. அதை செய்திருக்கிறார். இதை செய்திருக்கிறார்… என்கிறார்கள் ஆனால், எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவில் சட்டமன்ற காட்சிகள் எப்படி இருக்கிறதோ, அப்படித்தான் தமிழக சட்டமன்றம் தற்போது நடக்கிறது. சட்டமன்றம் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பில் பார்த்தாலே இது தெரிந்துவிடும். உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த இலாகா அமைச்சர்கள்தான் பதிலளிக்க வேண்டும் ஆனால், ஒருசில…

Read More

எஸ்எஸ் குளம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம்:7 பேர் மீது வழக்கு

கோவை எஸ்.எஸ்.குளம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடமும், வில்லங்க சான்று பெற வருபவர்களிடமும் இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து இந்த அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி ராஜேஷ் தலைமையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த மாதம் 27ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 82,500 ரூபாய் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அடுத்தக்கட்ட…

Read More

ரேஸ் கோர்ஸ் வாக்கிங் ஏரியா ஆக்கிரமிப்பு கடைகளுக்கு எச்சரிக்கை..

கோவை ரேஸ்கோர்ஸ் வாக்கிங் தளம் 2.5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளது. இந்த பகுதி, கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. 5 மீட்டர் அகலத்தில் வாக்கிங் பகுதி உருவாக்கப்பட்டு ஸ்டைலான கிரானைட் கோட்டிங் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டது. தினமும் காலை, மாலை நேரங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் வரை வாக்கிங் சென்று வந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை மேலும் இரு மடங்கு அதிகமாகியுள்ளது. கூட்டம் அதிகரிப்பினால் வாக்கிங்…

Read More

கோவையில் வீட்டு மனை பட்டா கேட்டு மடிபிச்சை எடுத்து போராட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. கோவை மாவட்டம் சூலூர் தாலுகா செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், செம்மாண்டம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமாக 33 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய்கள் பறித்து விற்பனை செய்ய ஏலம் விடப்படுவது வழக்கம். இதன்மூலம், கோயிலுக்கு கடந்த காலங்களில் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் கிடைத்தது. தற்போது ரூ. 19 லட்சத்திற்கு மட்டுமே…

Read More

நெல்லை மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருநெல்வேலி-மேட்டுப்பாளையம், போத்தனூர்-சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு RG ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போத்தனூர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06078) செப்டம்பர் 4 ம் தேதி முதல் 27-ம்- வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும்….

Read More

காட்டு பன்றியா சாக்கடை பன்றியா… வனத்துறையினர் குழப்பம்

கோவை மாவட்டத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் காட்டுப்பன்றிகள், உண்மையில் காட்டுப்பன்றிகளா அல்லது ஊருக்குள் சுற்றும் சாக்கடை பன்றிகளா என வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை தொடர்ந்து, அரசு உத்தரவின்படி குறிப்பிட்ட வனக்கோட்டங்களில் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை வனக்கோட்டத்தில் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சுமார்…

Read More

கோவையில் யூரியா கடத்தலில் முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது…

கோவையில் இருந்து கேரளத்திற்கு 25 டன் மானிய விலை யூரியா கடத்தல் வழக்கில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முக்கிய குற்றவாளியை கேரளாவில் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். மதுக்கரை ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி சந்திப்பு அருகே. கடந்த மாதம் 28ம் தேதி காலை வேளாண்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில், லாரியில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ‘பாரத் யூரியா 556 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது….

Read More

பேச மறுத்து சைகை கட்டிய அமைச்சர் ஆனந்த்…

தமிழக அமைச்சர் ஆனந்த் இன்று சென்னையிலிருந்து கோவை வந்தார். கோவை சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமாரின் மகன் திருமணத்திற்காக அமைச்சர் ஆனந்த் விமானம் மூலம் கோவை வந்தார் கோவை விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த பூங்கொத்துக்களையும் மிகவும் மரியாதையுடன் ஏற்றுக்கொண்ட ஆனந்த், ஒவ்வொரு தொண்டருக்கும் கை கொடுத்தபடியே வந்தார். இடையே, தவெக தொண்டர்கள்,”பொதுச்செயலாளர் வாழ்க” என்று கோஷங்களை எழுப்பினர். அப்போது வாய் மீது விரல் வைத்து காண்பித்து,…

Read More

கோவையில் drink and driving சோதனை தீவிரம்

போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர், மதுபோதையில் வாகனங்கள் ஒட்டுவோர் மற்றும் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24ம்தேதி முதல் 31ம்தேதி வரை 7 நாட்கள் தொடர் சோதனை நடந்தது. இச்சோதனையின்போது, சந்தேக நபர்களை கண்டறிதல் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, துணை கமிஷனர்கள் கார்த்திகேயன் தங்கதுரை மகேஸ்வரன் தலைமையில் கடந்த ஆக., 24ம்தேதி (திங்கள்) காலை 5…

Read More