கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் நுழைவு கோபுரம்
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் பிரமாண்டமாக நுழைவு ராஜ கோபுரம் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் பிரமாண்டமாக நுழைவு ராஜ கோபுரம் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.
தேர்வுதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 15.07.2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் TNPSC GROUPIL/GROUP IIA-ல் 645காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தேர்வுகளுக்கான முதல்நிலை தேர்வு 28.09.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 625 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை 18.11.2025 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இந்நிலையில் TNPSC GROUPII மற்றும் TNPSC GROUP IIA முதன்மை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் 10.12.2025 அன்று முதல்…
வட கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பாதையை கடக்க நடை மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நடை மேம்பாலத்தை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்துவதில்லை. கூட்டமாக பயணிகள் ரயில் பாதையில் நடந்து சென்றே கடக்கின்றனர். குறிப்பாக ரயில் நிலையத்திலிருந்து கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு நோக்கி செல்பவர்கள், வட கோவை மேம்பாலம் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி செல்பவர்கள் 2 ரயில் பாதைகளை கடந்து செல்கிறார்கள். சில நேரங்களில் சரக்கு ரயில் நிற்கும் போதும் அதற்கு…
கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, திருச்சி ரோடு சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நீடிக்கிறது. ரோட்டின் இரு புறமும் சுமார் 3 கி.மீ தூரம் வரை வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று மெதுவாக நகர்ந்து கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. இங்கே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த சில ஆண்டாக திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்த ரோட்டில் மேம்பாலம் அமைக்க கடந்த 2022ம் ஆண்டில் 110 கோடி…
கோவை கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள வாளையார் அணை முழுவதும் நிரம்பிவிட்டது. அணையில் பேக் வாட்டர் ஏரியா பகுதியில் தண்ணீர் கடல் போல் தேங்கி நிற்கிறது.. குளிர் சீதோசன நிலையில் ரம்யமாக காட்சி தரும் இந்த அணையை கேரளா செல்லும் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
கோவை திருச்சி ரோடு பழைய வன அலுவலக கட்டடம் 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனைப் பழமை மாறாமல் புதுப்பித்து கட்டியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஓட்டு பதிவு மெசின்கள், சின்னங்கள் காட்டும் கருவி மற்றும் கவுண்டிங் யூனிட் போன்றவை தெற்கு தாலூகா வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக ஸ்டிராங்க் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது பயன்படுத்திய பேப்பர்கள், ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூல பாதுகாப்பு குடோனில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டிற்கு மேலான ஆவணங்கள் இந்த குடோனில் தகர பெட்டியில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தபால் ஓட்டுகள், இதர படிவங்கள்,…
Work on extending the runway of the Coimbatore International Airport is expected to begin soon, even as discussions are under way on redesigning the airport’s main access point, according to officials. The airport at Peelamedu currently operates services to major domestic destinations including Chennai, Mumbai, Delhi, Pune, Bengaluru and Hyderabad, and to international destinations such…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது .இதில் மாற்றுத்திறனாளியான தெய்வானை (40) என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், எனக்கு திருமணம் ஆகி கணவர் இருக்கிறார். எங்களுக்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது. அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் திண்ணையில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என தெரிவித்தார். மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மாற்று திறனாளி வேல்முருகன் (37)…
உர்வாஸ்டோர், சிலிம்பி, குஜ்ஜாடி சேம்பர் பகுதியில் உள்ள ஸ்வர்ணா ஜுவல்லர்ஸ் கடைக்கு, நவம்பர் 21ஆம் தேதி மாலை, தன்னை அருண் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவர் ஒருவர் வந்தார்.“22ஆம் தேதி பேஜாய் காபி கட பகுதியில் உள்ள அஜந்த் பிசினஸ் சென்டரில் விருந்தினர்களுக்கு தங்க பிஸ்கட்டுகள் வழங்க வேண்டி உள்ளது. 10 கிராம் எடையுள்ள 24 தங்க பிஸ்கட்டுகள் வேண்டும்,” என்று தெரிவித்த அவர், வடிவத்தைத் தேர்வு செய்து, மறுநாள் மதியம் 12 மணிக்கு அலுவலகத்திற்கு கொண்டு வரும்படி…