வாக்குச்சாவடி பாதுகாப்பில் உஷார்… கோவை போலீசாருக்கு பயிற்சி வகுப்பில் உத்தரவு
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்களில் ஒட்டு சாவடி பணியில் உள்ள போலீசாருக்கான ஆலோசனை, பயிற்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் மற்றும் பல்வேறு தேர்தல் பிரிவு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 500 க்கும் மேற்பட்ட தேர்தல் பணி போலீசார் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாநகர், மாவட்ட அளவில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஓட்டு சாவடிக்கும் ஒரு போலீசார் பணியில் இருப்பார்கள்….
