கோவையில் பறக்கும் படை சோதனை: கட்டுக்கட்டாக பணத்துடன் சென்ற வியாபாரிகள்…!
கோவை மாவட்டத்தில் தேர்தலில் சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு பரிசாக பொருட்கள், பணம், நகை மற்றும் இதர பொருட்கள் வழங்குவதை தடுக்க சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 24 மணி நேரம் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை நிலையான கண்காணிப்பு படை என 180 குழுவினர் மாவட்ட அளவில் சோதனை செய்கிறார்கள். வாகனங்களின் இயக்கம் ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பணிகளில் கட்சி, வேட்பாளர்கள் ஈடுபடவில்லை. பொதுமக்கள், வியாபாரிகள், மருத்துவ தேவை, தொழில் அபிவிருத்தி…
