கோவை குளக்கரையில் நிர்வாண நிலையில் ஆண் கொலை…!
கோவை சூலூர் ஆச்சான் குளம் கரை பகுதியில் இன்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது .
நிர்வாண நிலையில் இந்த சடலம் குளக்கரையில் தூக்கி வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக நீலாம்பூர் போலீசில் புகார் தரப்பட்டது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
அடிதடி மோதல் ஏற்பட்டதில் அந்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். கொலை செய்த மர்ம நபர்கள் இறந்தவரின் ஆடையை கழற்றி எடுத்து சென்று விட்டார்கள். முன்விரோதம் அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது.
போலீசார் குளக்கரைக்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து சந்தேக நபர்களை தேடி வருகின்றனர். குளக்கரையில் நிர்வாணம் நிலையில் ஆண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
