கோவையில் கொள்ளையடித்த 2 பேர் கைது; 40 பவுன் தங்க நகை மீட்பு..!
கோவை பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியை நிலையில் உள்ள வீடுகளில் திருட்டு கொள்ளை சம்பவங்கள் நடந்தது. ராகவ் கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் தங்க நகை, லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது . இவர் வெளியூர் சென்ற நிலையில் கொள்ளை நடந்ததாக தெரியவந்துள்ளது .
இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர் . வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவில் திருடர்கள் வந்து சென்ற காட்சி பதிவு ஆகியிருந்தது. இதை வைத்து போலீசார் விசாரித்த போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்( 34 ) சரவணன்,( 25 ) ஆகியோர் கொள்ளையடித்த விவரம் தெரியவந்தது .
இவர்களை இன்று போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் . இவர்களிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது . இவர்கள் மேலும் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடித்தது தெரிய வந்தது அதில் திருடிய நகை பணம் மற்றும் பல்வேறு பொருட்களை மிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
