கோவை காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்த வாலிபர் பலி…
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பைக்கை பாலத்தில் நிறுத்திய அவர் திடீரென மேலே இருந்து கீழே குதித்தார் . இதில் கால்கள் முறிந்த நிலையில் உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விசாரணையில் அவர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி (40) என தெரிய வந்தது. இவர் அறக்கட்டளை ஒன்று நடத்தி வந்தார் . என்ன பிரச்சனை காரணமாக அவர் பாலத்திலிருந்து குதித்தார் என தெரியவில்லை. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வாலிபர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
